உத‌யாவிற்காக‌ காவ‌ல்நிலைய‌த்தில் புகார்!

>> Friday, February 27, 2009



நாளை (னிக்கிழமை 28/02/2009) காலை 10 ணியவில் பிரிக்பீல்ட்ஸ் காவல்நிலையத்தில் க்கள் க்தி ஆதவாளர்கள் ஒன்று திரண்டு, உதயாவிற்கு றுக்கப்படும் முறையானசிகிச்சையைக் ண்டிக்கும் கையில் அம்னோ, கெம்தா ற்றும் உள்துறை அமைச்சிற்கு எதிராகபுகார் அளிக்கவிருக்கின்றர்.

நாடு ழுவியநிலையில் க்கள் க்தி ஆதவாளர்கள் இந்நிகழ்வில் திரளாகஒன்று திரண்டு பிரிக்பீல்ட்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு திரு.செயதாசு அனைவரையும் கேட்டுக் கொள்கிறார்.

ற்சம், உதயாவின் கால்கள் வீக்கடைந்தும் நாளுக்கு நாள் றுத்துக்கொண்டும் போகிறது. தொடர்ந்து உதயாவிற்கு சிகிச்சை றுக்கப்பட்டு ந்தால் அவர் ன் கால் விரல்களை இழக்கும் நிலைமை ஏற்பலாம். எனவே, உதயா விரும்புவதுபோல் ஒரு னியார் நிபுணத்துவருத்துவனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பவேண்டும் எனபது அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.

உரிமைப் போராட்டத்திற்காகஓயாது ந்தஅந்தகால்களை காப்பாற்றவேண்டியது ம்முடையமையெனஅறிக‌.. அனைவரும் திரண்டு வாரீர்!!

போராட்டம் தொடரும்...

Read more...

அறுவர் சுடப்பட்டது நியாயமா?

>> Tuesday, February 24, 2009

கடந்த வாரம், சுடப்பட்ட ஆறு இந்தியர்களின் குடும்பத்தினரையும் அவர்களோடு நெருங்கிய சில நண்பர்களையும் அண்டை வீட்டார்களையும் மக்கள் சக்தியினர் சுங்கை கராங்கான், கூலிமிற்கு சென்று சந்தித்து நடந்த விவரங்களை கேட்டு அறிந்தனர். இவர்களிடமிருந்து கிடைத்த தகவல்களை ஆய்ந்து பார்க்கும்பொழுது அந்த அறுவரும் சுடப்பட வேண்டிய அவசியமே இல்லை எனத் தெரிய வருகிறது. சுடப்பட்ட ஒருவர் உடல் அங்கவீனரும் கூட..

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இரண்டு துப்பாக்கிகளை மட்டுமே கண்டெடுத்ததாக காவல்த்துறையினர் கூறுகின்றனர். அப்படியென்றால், குறைந்தது இருவர் மட்டுமே துப்பாக்கி ஏந்தியிருக்க வேண்டும். ஆனால், சுடப்பட்ட நபர்களோ அறுவர்! ஒருவேளை காவல்த்துறையினர் அவ்வறுவரையும் சுட்டப்பின்பு இரண்டு துப்பாக்கிகளை சம்பவ இடத்தில் வைத்திருக்க வேண்டும்!

இறந்த நபர்களின் சூடுபட்ட இடங்களைப் பார்க்கும்பொழுதும் அவர்கள் அருகிலிருந்து சுடப்பட்டு இறந்திருக்க வேண்டும் என சந்தேகிப்பதாக அவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

சூடு நடைப்பெற்ற நேரத்தில்நான் சரணடைகிறேன்!” என சிலர் கூச்சலிட்டதை தாம் கேட்டதாக அண்டை வீட்டார் ஒருவர் கூறுகிறார்.

சுடப்பட்ட அறுவரில் ஒருவரே காவல்த்துறையினரால் தேடப்பட்டவராகவும், மற்ற ஐவரும் தவறுதலாக சுடப்பட்டு வீணே உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றனர் என அவரவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சுங்கை கராங்கானில் பதிவு செய்யப்பட்ட காணொளி காட்சியைக் காணவும்!



நாட்டில் எவனெவனோ லட்சக் கணக்கில் மக்கள் பணத்தை சுருட்டிக் கொண்டிருக்கின்றான் , சி4 வெடிகுண்டைப் பயன்படுத்தி ஆட்களை காலி செய்கின்றனர், கொள்ளை, கொலை என பெரிய அளவில் குற்றங்கள் புரிந்துவரும் முக்கியப் புள்ளிகளை விட்டுவிட்டு சில்லரைத் தனமான பிரச்சனைகளைக்கு துப்பாக்கி பிரயோகம் நடத்திவரும் காவல்த்துறையினர் மீது நாளுக்கு நாள் நம்பிக்கை குறைந்து வருகிறது. சந்தேகத்திற்குரியவர்களை திறமையாக வளைத்துப் பிடிப்பதற்கு இவர்களுக்கு என்ன கேடாம்!!?

Read more...

அண்ணன் உதயாவுக்குத் தேவை உடனடி சிகிச்சை!

>> Wednesday, February 18, 2009

மலேசியா கினி படச்சுருள்



போராட்டம் தொடரும்...

Read more...

வெட்டப்படும் நிலையில் உதயாவின் கால்கள்!

>> Tuesday, February 17, 2009



இன விடுதலைக்காகவும் , சம உரிமைக்காகவும் நடந்த உதயாவின் கால்கள் இன்று வெட்டப்படும் நிலையில் உள்ளன. இண்ட்ராஃப் வழக்கறிஞர்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதானவுடன் நாடெங்கிலும் மக்கள் பொங்கி எழுந்தனர். நாடு தளுவிய அளவில் ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் தொடர்ந்தாற்போல் நடைப்பெற்று வந்தன.

இன்று உதயா எனும் மாமனிதனுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படாமல் தனது கால்களை இழக்கும் நிலையில் இருக்கிறார். ஒருத்தராவது குறைந்த பட்சம் ஆலயத்தில் அவரின் பெயரில் பிரார்த்தனை செய்திருப்போமா? அன்று இருந்த அந்த வேகமும் விடுதலைக்கான வேட்கையும் இன்று எங்கே?

இந்த நன்றிகெட்ட தனத்தையும் அஞ்சி நடுங்கும் கோழைத்தனத்தையும் மீண்டும் இந்திய சமூகம் காணாதா என ஏங்கிகொண்டிருந்த அம்னோவின் வயிற்றில் படிப்படியாக பாலை வார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது வேதனையான உண்மை. உதயாவை பெற்ற தாய் அங்கு கண்ணீர் வடிக்கிறாள்! என் மகனை காப்பாற்றுங்கள் என தள்ளாத வயதிலும் தெருவில் நின்று கூக்குரலிடுகிறாள். நாம் இவை அனைத்தையும் காலை தேநீரைச் சுவைத்துக்கொண்டே நாளிதழ்கள் படித்து தெரிந்துகொள்கிறோம். ஆனால், நம்மிடமிருந்து ஒரு சொற்ப முயற்சியும் வெளியில் எட்டிப் பார்க்கவில்லை!

மக்கள் சக்தி தலைவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் சில மூடர்கள் எனக்கு அந்த பதவியைக் கொடு, இந்தப் பதவிக்கு என்னை பரிந்துரை செய், சட்டமன்ற தேர்தலில் என்னை நிற்க வை! என சொந்த சுயநல வியாபாரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளதால் உதயாவின் உடல் நிலை குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. அந்த குறிப்பிட்ட தலைவர்களின் பின்னால் பித்து பிடித்து அலையும் விஷ பாம்புகளுக்கும் இவ்விடயத்தில் அக்கறையில்லை! இனி, அந்த கூட்டத்தை நம்பி ஒரு புண்னியமும் இல்லை!

ஒரு மனித உரிமை இயக்கம் எப்படி அரசியலுக்கு சோரம் போனது?! குறிப்பிட்ட கட்சிகளுக்கு கூஜா தூக்குவதற்குதான் மக்கள் சக்தி உருவானதா என்ற கேள்வி இன்று நம்முள் எழுகின்றது! இன்று யாரும் இண்ட்ராஃபின் 18 கோரிக்கைகளைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை, நினைவுக் கூறவும் விரும்புவதில்லை! அரசு எந்திரங்களின் தொடர் ஒடுக்குதலால் மீண்டும் சமுதாயம் அஞ்சி நடுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது! அன்றிருந்த வீர இளைஞர்கள் இன்று சோர இளைஞர்களாய் பயத்தின் நிழலில் இருந்துவருவதை கவனிக்க முடிகிறது!

அதனால்தான் இன்று உதயாவின் உயிருக்கு உலை ஏற்பட்டபின்பும் கேட்பதற்கு நாதியில்லாமல் அவரும் அவரது குடும்பத்தினரும் பரிதாப நிலையில் உள்ளனர். அவரின் தற்போதைய உடல் நிலையைப் பார்க்கும் பொழுது குறைந்தது இரு வாரங்களுக்குள் முறையான சிகிச்சை வழங்கியே ஆக வேண்டிய நிலை உள்ளது. வீணடிக்கப்படும் ஒவ்வொரு நொடியும் அவருடைய உடல் நிலை மேலும் மோசமடையலாம்!

இனி முடிவு பொதுமக்களின் கையில்தான் உள்ளது! என்ன செய்யப்போவதாய் உத்தேசம்? பிரதமருக்கு, உள்துறை அமைச்சருக்கு முறையான கடிதம் அனுப்பியாயிற்று! காவல்நிலையத்தில் புகார் செய்தாயிற்று! பதாகைகளையேந்தி நியாயத்தையும் கேட்டாயிற்று! இனி, உதயாவைக் காப்பாறுவதற்கு ஏதேனும் வழிகள் உண்டா? தயவு செய்து கூறுங்கள்....

Read more...

மலேசியர்களுக்கு உதயாவின் மடல்!

>> Tuesday, February 10, 2009

அண்ணன் உதயகுமாரின் இம்மடலைப் படித்து பாருங்கள். கருத்தூன்றி படித்து பார்த்தால் பல கேள்விகளுக்கு இம்மடல் விடையளிப்பதை உணர முடியும்...







ஆங்கில பதிப்பு : பதிவிறக்கம்

மறவாமல் இக்கடிதத்தை நகலெடுத்து தெரிந்தவர்களிடம் விநியோகியுங்கள்..

போராட்டம் தொடரும்..

Read more...

இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழிப் பாடம் ஒரு கானல்நீரா?

>> Monday, February 9, 2009

நேற்று பினாங்கு மக்கள் சக்தி சமூக சேவைப் பந்தலுக்கு இடைநிலைப் பள்ளி பெண் ஆசிரியை ஒருவர் வருகை புரிந்திருந்தார். அவருடன் சிறிது நேரம் உரையாடினேன். அரசாங்க கொள்கைகளாலும், பொறுப்பற்ற அரசு அதிகாரிகளாலும், சமுதாயத்தின் மெத்தனப் போக்காலும் தமிழ் மொழி எவ்வாறெல்லாம் மெல்ல மெல்ல சாகடிக்கப்படுகிறது என்பதனை மிகுந்த வருத்தத்துடன் கூறிவிட்டு ஒரு புகாரையும் கொடுத்துவிட்டுச் சென்றார். பினாங்குத் தீவிலுள்ள ஏழு தமிழ் மொழிப் பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவர்கள் இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழியை ஒரு தேர்வுப் பாடமாக பயிலுவதற்கு வாய்ப்புகள் மலிந்து வருவதாக அவருடைய புகார் கூறுகிறது.

அவருடைய புகாரை படிக்க கீழ்கண்ட படங்களைச் சுட்டுங்கள்.





அப்பெண் ஆசிரியரைப் போன்று மற்ற தமிழாசிரியர்களுக்கும் மொழி உணர்வும், சமுதாயத்தின்பால் அக்கறையும் இருத்தல் வேண்டும். தன் தாய்மொழியைக் கற்பது என்பது ஒரு மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால், இன்று பல பள்ளிகளில் அவ்வுரிமை மறுக்கப்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத ஓர் உண்மையாகும்! எந்தெந்த சூழ்நிலைகளில் தமிழ் மொழி சாகடிக்கப்படுகிறதோ, அச்சூழ்நிலைகளைக் கண்டறிந்து அவற்றிற்கான தீர்வைக் காண வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் நம்மிடையே இருக்க வேண்டும். தயவு செய்து, புகாரைப் படித்துவிட்டு அதற்கான நடவடிக்கையை வாசகர்கள் முடிந்தால் பரிந்துரைக்கவும். தீர ஆலோசனையின் பிறகு இப்பிரச்சனைக்கு தீர்வுகாண முயற்சி எடுக்கப்படும்.

போராட்டம் தொடரும்...

Read more...

பினாங்குத் தீவு மக்கள் சக்தி பால்குடம்

>> Sunday, February 8, 2009

மு.ப : 10.50

காலை 8 மணியளவில் லோரோங் கூலிட் சிறீ முத்து மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட மக்கள் சக்தி பால்குடம் தற்சமயம் தண்ணீர்மலையில் பால்குட காணிக்கை செலுத்துவதற்கு தயாராக இருக்கின்றனர். மக்கள் சக்தி சமூக சேவைப் பந்தலில் வழக்கம்போல் பொதுமக்கள் பலர் அடையாள அட்டை, பிறப்புப் பத்திரம், சமூக நல இலாகா உதவிகள் கோரி வந்த வண்ணம் உள்ளனர்.

Read more...

பினாங்கு மக்கள் சக்தி பந்தல் களைக்கட்டிவிட்டது!

>> Saturday, February 7, 2009

காலை மணி 9 தொடங்கி பினாங்குத் தீவு மக்கள் சக்தியின் சமூக சேவைப் பந்தல் இயங்க ஆரம்பித்து விட்டது. மக்கள் சக்தி சமூக சேவைப் பந்தலை திரு.நரகன் அவர்கள் குத்து விளக்கேற்றி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். தண்ணீர்மலையில் மக்கள் கூட்டம் பெருகிவரும் இவ்வேளையில்,மக்கள் சக்தி பந்தலுக்கான வரவேற்பும் அமோகமாக இருக்கிறது. பொதுமக்கள் பல பிரச்சனைகளுடன் மக்கள் சக்தி பந்தலை நாடுகின்றனர். பந்தலில் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் தேர்தல் வாக்காளர் பதிவினை மும்முரமாக செய்து வருகின்றனர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிகழ்வுகளின் படக்காட்சிகளை பதிவேற்றுகிறேன்.



Read more...

பேராக் மாநிலத்திற்கு புதிய மந்திரி புசார்??

>> Thursday, February 5, 2009


பேராக் மாநிலத்தின் புதிய மந்திரி புசாராக பங்கோர் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் சம்ப்ரி அப்துல் கதிர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அப்துல்லா அகமது படாவி இன்று அறிவித்துள்ளார். பேராக் மாநிலத்தின் அரசியல் நெருக்கடிக்கு இன்னும் முறையான தீர்வு காணப்படாத இவ்வேளையில் பிரதமர் இவ்வறிப்பை செய்துள்ளார். பாரிசானால் புதிய மந்திரி புசாராக தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோ டாக்டர் சம்ப்ரி அரசியல்த்துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். சட்டமன்ற பதவி வகிப்பதற்கு முன்பு அவர் அனைத்துலக இசுலாமியப் பல்கலைக்கழகத்தில் விரிவுரைஞராகப் பணியாற்றியுள்ளார்.

1998-ஆம் ஆண்டில் அனுவார் இபுராகிம் துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதையொட்டி வெடித்த போராட்டத்தில் இவர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நாளை மாலை 3.30 மணியளவில் பேராக் கோலாகங்சாரில் அமைந்திருக்கும் இஸ்கந்தாரியா அரண்மனையில் பாரிசான் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சுல்தான் அசுலான் சா முன்னிலையில் பதவியேற்பர் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து வருகின்ற செவ்வாய்க்கிழமையன்று மாநில செயலவை உறுப்பினர்கள் சுல்தான் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

மக்களின் விருப்பத்தையும் மீறி நாளை இவரின் பதவியேற்புச் சடங்கு நடைப்பெறுமா?

பொறுத்திருந்து பார்ப்போம்..

Read more...

இன்றிரவு, ஈப்போவில் ஒரு லட்சம் மக்கள் அணித்திரள்வர்!


மக்கள் கூட்டணிக்கே எங்கள் ஆதரவு!

இன்றிரவு 7.30 மணியளவில் பேராக் விளையாட்டு அரங்கில்!

1 லட்சம் மக்களின் பேரணி!

பேராக் மக்களே திரண்டு வாரீர்..!


இவ்வாறு அழைப்பு விடுக்கின்றனர் மக்கள் கூட்டணித் தலைவர்கள்! பேராக் மாநில சுல்தான் இன்று டத்தோ சிறீ நிசாரை பதவி துறப்பு செய்ய பணித்துள்ளதையடுத்து, மக்களின் ஆதரவு என்றும் மக்கள் கூட்டணிக்கே என நிரூபிக்கும் வகையில் 1 லட்சம் பேர் இன்றிரவு ஈப்போ பேராக் விளையாட்டு அரங்கில் ஒன்றுகூடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் கூட்டணியின் அனைத்து தலைவர்களும் இப்பேரணியில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இதற்கிடையில், இப்பேரணியில் கலந்துகொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மலேசிய அரசியல் வரலாற்றிலேயே இது ஒரு கேவலமான அதிகார மாற்றம் என்றுதான் கூற வேண்டும். பெரும்பான்மை மக்கள் விரும்பும் ஓர் ஆட்சியை மக்களின் விருப்பமின்றியும் அனுமதியின்றியும் களவாடியதில் அம்னோ மீண்டும் தன்னுடைய கீழ்த்தரமான அணுகுமுறைகளை பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது.

கரைபடிந்த ஊழல் பேர்வழிகள் என நம்பப்படும் இரு தவளைகள் தங்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மூடி மறைப்பதில் முனைப்பு காட்டியிருக்கின்றன. மக்கள் கூட்டணியின் ஆட்சியாயிருப்பினும், நீதித்துறை என்னவோ அம்னோவின் கைப்பாவையாக விளங்கிவருவதால் இவ்விரு தவளைகளுக்கும் தப்பிக்க வேறு வழி தெரியவில்லை. மக்கள் கூட்டணியுடன் இருந்தால் சிறைவாசம்தான் மிஞ்சும் எனக் கருதிய இவ்விரு தவளைகளும் அம்னோவிற்கு தாவ, தங்களின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இனி நீங்கிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றன.

ஒருவகையில், இவ்விரு தவளைகளையும் காப்பாற்றுவதாக வாக்களித்து தன் பக்கம் தாவ வைத்தது அம்னோதான். அதற்கு எத்தனை லட்சங்கள் செலவாகின என்பது தெரியவில்லை! தற்சமயம் பேராக் மாநிலத்தைக் கைப்பற்றி விட்டதாக கொக்கரித்து வரும் பாரிசானால் ஒரு நிலையான ஆட்சியை நிச்சயம் வழங்க முடியாது. சட்டமன்றங்களை கலைத்துவிட்டு புதியதொரு தேர்தலுக்கு தயாராகுமாறு மக்கள் கூட்டணி விடுத்த சவாலை அம்னோ அரசாங்கம் எதிர்க்கொள்ள திராணியற்று குறுக்கு வழியில் அதிகார மாற்றத்தை நிகழ்த்தி காட்டியுள்ளது.



எந்த காலத்தில்தான் அம்னோ நேருக்கு நேர் பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறது! நேருக்கு நேர் மக்களை எதிர்கொள்ள அஞ்சும் அம்னோ அரசாங்கம், கடந்த 52 ஆண்டுகளாக மறைவில் நின்று காரியத்தை சாதித்து, அரசு எந்திரங்களை ஏவிவிட்டு அனைவரின் வாயை மூடச் செய்து ஆட்சி கட்டிலில் நிலைத்திருக்கிறது. வருங்கால பிரதமர் என வர்ணிக்கப்படும் நஜீப் கேவலமான ஓர் உத்தியைக் கையாண்டு அரசைக் கைப்பற்றியதை நினைத்தால் ஆத்திரமாகத்தான் இருக்கிறது! பத்தே நாட்களில் ஒரு புல்லுருவியை மக்கள் கூட்டணியில் மேயவிட்டு காரியத்தை சாதித்துகாட்டியிருக்கிறது அம்னோ அரசாங்கம்!

சட்டமன்றங்களை கலைத்துவிட்டு புதியதொரு தேர்தலுக்கு முனைந்தால்தான் என்ன? இவ்விடயத்தில் பேராக் சுல்தானின் முடிவு பல ஐயப்பாடுகளை எழுப்புகின்றது. நீதித்துறையின் தலைவராக பலகாலம் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுல்தானுக்கு மக்களின் விருப்பம் என்னவென்று தெரியாமலா இருக்கும்!

நேற்று ஒரு மடையன் அறிக்கை விடுகிறான்! தேர்தல் நடத்தினால் நிறைய பணம் செலவாகுமாம். பொருளாதார மந்தநிலையைக் கருத்தில் கொண்டு தேர்தலை நடத்தக் கூடாது என அந்த அறிவுஜீவி கருத்து கூறுகிறது. அநாவசிய செலவுகள் செய்வதில் பெயர்ப்போன அம்னோ அரசாங்கம் ஒரு மாநிலத் தேர்தலை நடத்துவதில் சிக்கனம் பார்க்கிறது என்றால் அது காதில் பூ சுற்றும் கதை!



தற்சமயம், அனுவார் தலைமையில் மக்கள் கூட்டணித் தலைவர்களோடு மந்திரி புசார் இல்லத்தில் ஓர் அவசர சந்திப்பு கூட்டம் நடைப்பெற்றுவருகிறது. கெடா மற்றும் கிளந்தான் மாநில மந்திரி புசார்களும் இச்சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். அலுவலகங்களை விரைவில் காலி செய்வதற்கும் அரசு வாகனங்களின் சாவிகளை ஒப்படைப்பதற்கும் மக்கள் கூட்டணி தலைவர்களிடம் கட்டளையிடப்பட்டுள்ளது. எந்தவொரு அதிகாரப்பூர்வ கடித்த்தையும் வெளிகொண்டுச் செல்லக்கூடாது எனவும் பணிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களை நோக்கிச் செல்லும் பாதைகளை காவல்த்துறையினர் மூடியுள்ளதாகத் தெரியவருகிறது. செலாப்பாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ யிட் ஃபூங்கின் இல்லத்தின் முன்பும் சேவை மையம் முன்பும் ஆத்திரம் கொண்ட மக்கள் சிலர் கல்லெறி தாக்குதல் நடத்தியதாக அறியப்படுகிறது.

தற்சமயம் அப்துல்லா அகமது படாவி ஈப்போவில் இருப்பதாகவும், இன்று பாரிசானின் பிரதிநிதிகள் பதவியேற்கவிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மக்கள் கூட்டணி பிரதிநிகள் உடனடியாக தங்களின் அலுவலகங்களைக் காலி செய்துவிட்டு போகுமாறு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அனுவார் இபுராகீம் மீண்டும் சுல்தானை சந்திக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.

பேராக் மக்களே, இது உங்கள் அரசாங்கம்! உங்கள் மாநில எதிர்காலத்தை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்! கரைபடிந்த ஊழல் அரசியல்வாதிகள் அல்ல! உங்களின் பொன்னான நேரத்தை சற்றுநேரம் ஒதுக்கி, இன்றிரவு ஈப்போ பேராக் விளையாட்டரங்கில் ஒன்றுதிரண்டு மக்கள் சக்தியை நிரூபித்துக் காட்டுங்கள்!

Read more...

பேராக் மந்திரி புசாரின் மேசையிலிருந்து...

>> Wednesday, February 4, 2009


பேராக் மாநில மக்கள் கூட்டணி அரசு இன்னும் ஆட்சியை இழந்துவிடவில்லை. அனைத்து அலுவல்களும் வழக்கம்போல் நடைப்பெறும்.”

சற்றுமுன்பு நிருபர்களிடம் பேராக் மாநிலத்தில் நிலவிவரும் அரசியல் நெருக்கடி குறித்த விவகாரத்தை விளக்குகையில், மேற்கண்டவாறு பேராக் மாநில மந்திரி புசார் டத்தோ சிறீ முகமது நிசார் சமாலுதீன் கூறியுள்ளார்.

பேராக் மாநில மக்கள் கூட்டணி அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக இயங்கி வருகிறது. இறுதி முடிவு பேராக் மாநில சுல்தான் கையில். இவ்விடயம் குறித்து துவாங்கு இன்னும் முடிவெடுக்கவில்லையாதலால், மக்கள் கூட்டணியின் அரசு தொடர்ந்து வழக்கம்போல் இயங்கிவரும். பேராக் மாநில சுல்தானின் வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்வுகளில் நான் கலந்துக் கொள்வேன்என அவர் கூறினார்.

இதற்கு முன்பு தாம் மாட்சிமை தங்கிய பேராக் மாநில சுல்தான் அசுலான் சா அவர்களை 'கிந்தா' அரண்மனையில் சந்தித்து அரசியல் நிலவரங்கள் மற்றும் மாநில அரசு எதிர்நோக்கிவரும் நெருக்கடி குறித்து விளக்கமளித்ததாகவும், புதிய மாநில தேர்தல் நடத்தப்பெறுவதற்கு விண்ணபித்ததாகவும் கூறினார்.

இனி முடிவு துவாங்கு கையில். ஒருவேளை மாநில தேர்தல் நடத்தப்பெற்றால், மக்கள் உண்மையான தலைவர்களை தேர்தெடுப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். இவ்விடயம் குறித்து முடிவெடுக்க துவாங்கு சட்ட ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். துவாங்குவின் முடிவில் நீதி இருக்கும். இவ்வேளையில், பேராக் மாநில மக்களை அமைதியுடன் இருக்குமாறும், எந்தவொரு அசம்பாவிதங்களுக்கும் துணைப்போகாது பொறுமை காக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அலுவல்கள் வழக்கம்போல் நடைப்பெறும்என்றாரவர்.

நிருபர் சந்திப்பு கூட்டத்தில் டத்தோ சிறீ நசீப் துன் ரசாக் கூறிய விளக்கம் குறித்து அவரிடம் அணுகிக் கேட்டபொழுது, “நசீப் பேராக் மாநில அரசாங்கத்தை கைப்பற்றுவதில் கண்ணியமற்ற போக்கை கையாளுகிறார். டத்தோ நசாருதீன் அம்னோவில் மீண்டும் இணைவது குறித்து நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. காரணம், நசாருதீன் பாரிசானை ஆதரிக்கிறார் எனும் நசீப்பின் கூற்றை நாம் மறுக்கவேண்டியுள்ளது. நசாருதீன் கட்டாயத்தின்பேரில் கட்சி தாவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நசாருதீனின் குடும்பத்தினரே அவரைக் காணவில்லையென காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர். பேராக் மாநில ராசா மூடா அழைப்பதாகக் கூறி இரு ஆடவர்கள் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அச்சந்திப்பு உண்மையில் நடைப்பெறவில்லை. நானும் அவரின் குடும்பத்தினரும் அவரைத் தொடர்புக் கொள்வதற்கு பலமுறை முயற்சி செய்தும் பலனளிக்காமல் போய்விட்டது.” என்றாரவர்.

***

மாட்சிமை தங்கிய பேராக் மாநில சுல்தான் அசுலான் சா அவர்கள், மக்களின் நலனையும் விருப்பத்தையும் கருத்தில் கொண்டு நியாயமான முடிவை அறிவிப்பார் என எதிர்ப்பார்ப்போம். தற்சமயம் பேராக் மாநிலத்தில் பாரிசானுக்கு ஆதரவாக 31 சட்டமன்ற இடங்களும், மக்கள் கூட்டணியின் சார்பில் 28 சட்டமன்ற இடங்களும் கைவசம் உள்ளன. பேராக் மாநில அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 16(6)-ன்படி, சட்டமன்றத்தில் மாநில மந்திரி புசாருக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தாலோ அல்லது பெரும்பான்மை ஆதரவை இழந்தாலோ, மந்திரி புசாரும் அவரின்கீழ் பணிக்கப்படிருக்கும் சட்டமன்ற செயலவை உறுப்பினர்கள் பதவியைத் துறந்தாக வேண்டும் என வரையறுக்கிறது.

முடிவை பொறுத்திருந்து பார்ப்போம்...

பி.கு : கருத்துக்கணிப்பில் உங்களது வாக்கை அளியுங்கள்.

Read more...

மக்கள் கூட்டணி பிரதிநிகளுக்கு ஒரு திறந்த மடல்!

>> Sunday, February 1, 2009


கடந்த வாரம் சில முக்கிய சம்பவங்கள் அரங்கேறியதையடுத்து சில அடிப்படைக் கேள்விகள் நம்மை துளைத்தெடுக்கின்றன. குகன் எனும் இளைஞரின் மரணச் சம்பவத்தையொட்டிய பல கேள்விகள்! அவற்றில் சில நன்னெறிக் கேள்விகள், அரசியல் கேள்விகள், ஏனைய அடிப்படைக் கேள்விகள் இருக்கின்றன.

  1. முதல் அடிப்படைக் கேள்வி - "எந்தவொரு கொலையும் ஏற்றுக்கொள்ளகூடியதா?
  2. கொல்வதற்கு யாருக்கு உரிமை உண்டு?
  3. சில கொலைகள் மற்ற கொலைகளைவிட ஏற்றுக்கொள்ள கூடியதா?
  4. காவல்த்துறையினர் புரியும் கொலைகளுக்கும் மற்றவர்கள் புரியும் கொலைகளுக்கும் வேறுபாடுகள் உண்டா?
  5. சட்ட மீறல்கள் அடிப்படையில் சட்ட அமலாக்க அதிகாரிகளால் கொல்லப்படுவது நியாயமா?
  6. ஏன் குகனின் கொலை குறித்து பலதரப்பட்ட தற்காப்பு வாதங்கள் எழுகின்றன?
  7. கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் தரப்பினரை ஏன் சிலர் பாதுகாக்க முனைகின்றனர்?
  8. கொலையில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் காவல்த்துறையினரை தடுத்துவைப்பதற்கு ஏன் காவல்த்துறை சிரமப்படுகிறது? 25 நவம்பரன்று பத்துமலை முருகன் ஆலயத்தில் இருந்த ஒரே காரணத்திற்காக 60க்கும் மேற்பட்ட மலேசிய இந்தியர்களை பிணையற்ற தடுப்புக் காவலில் வைத்து கொலை குற்றச்சாட்டு மிக சுலபமாக சுமத்தப்பட்டதே.
  9. ஏன் பெரும்பான்மை மலேசியர்கள் இக்கொலை தொடர்பாக மௌனம் சாதிக்கின்றனர்?
  10. ஏன் இண்ட்ராஃப் இயக்கமும், எதிர்க்கட்சி இந்திய பிரதிநிகளும், சில முற்போக்குசிந்தனையுள்ள வலைப்பதிவர்களுமே இவ்விடயம் குறித்து மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்கின்றனர்.
  11. இவ்விடயம் உண்மையிலேயே ஒட்டுமொத்த மலேசியரின் விவகாரமா அல்லது மலேசிய இந்தியர்களின் விவகாரமா? இவ்விடயம் ஒட்டுமொத்த மலேசியர்களின் விவகாரம் என மக்கள் வெளியில் கூறிக் கொண்டாலும், நடப்பதைக் கண்காணித்தால் மலேசிய இந்தியரின் விவகாரமாகத்தான் தெரிகிறது.

இவ்வனைத்து கேள்விகளையும் சிந்திக்கையில், நம் மலேசிய சமூத்தின் அடிப்படை இயக்கத்தில் ஏதோ கோளாறு இருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. நீங்கள் இக்கருத்துக்கு உடன்படுகிறீர்களோ இல்லையோ, ஆனால் எனக்குத் தெரிந்தவரையில் சமூக இயக்கத்தில் நிலவிவரும் அடிப்படைக் கோளாறுகள் மிக ஆழமாக வேரூன்றியிருப்பதுடன், ஏனைய பிரச்சனைகளைவிட இதுதான் முதன்மையான பிரச்சனையாகக் கருத வேண்டியுள்ளது.



குகனின் மரணமும் மற்ற பிரச்சனைகளைப் போலவே அதிகமான ஆர்பாட்டமும் குறைவான நடவடிக்கை அல்லது நடவடிக்கையே இல்லாது போய்விடுமா. நடப்பதனைத்தையும் கவனிக்கையில் குகனின் மரணமும் காலத்தால் மறக்கடிக்கப்படும் வகையில் சார்ந்திருப்பதாக எனக்குத் தென்படுகிறது - இவ்விடயத்தில் ஆத்திரமும், வெறுப்பும் என்னை ஆட்படுத்துகின்றன. ஆனால், இக்கூற்றைப் பொய்யாக்க முடியும். சரியான சிந்தனைக் கொண்ட மனிதர்கள் இருந்தால்,( நான் குறிப்பிடுவது மனிதர்களை மட்டுமே, மலாய், சீனர், இந்தியர்கள் என பாகுபடுத்திக் கூறவில்லை) இதுதான் சமயமென அனைவரும் ஒருமித்தக் குரலெழுப்பி காவல்த்துறையினரின் அராஜகம் இனிவருங்காலங்களில் தொடராதிருக்க ஒரு முற்றுப்புள்ளி வைக்க உதவலாம்.


இவ்விவகாரம் உண்மையிலேயே ஒரு மலேசியனின் விவகாரம் என அனைவரும் சிந்தித்தால், பாராளுமன்றத்தில் மக்கள் கூட்டணி பிரதிநிதிகள் ( மாணிக்கவாசகம், மனோகரன், சிவராசா போன்றோர் அல்ல) காவல்த்துறை ஒழுங்கு குறித்த சுயேட்சை விசாரணைக் குழு அமைத்திட குரலெழுப்ப வேண்டும். இதனையே தேசிய முன்னணியின் பிரதிநிகளையும் செய்யச் சொல்லி நான் கூற விரும்பவில்லை, காரணம் அது பயனற்றது. என்னுடைய இக்கூற்று பொய் என்றால், பாராளுமன்றத்தில் மக்கள் கூட்டணி இவ்விடயம் குறித்து பேசப்படும்பொழுது தேசிய முன்னணியின் பிரதிநிகள் சிலர் இதற்கு ஆதரவு தெரிவிக்கட்டும்.

இவையனைத்தும் நடைப்பெறுவதற்குமுன் என்னுள் ஒரு சந்தேகம் எழுகின்றது. மக்கள் கூட்டணியால் இவ்விவகாரத்தை உண்மையிலேயே கையிலெடுத்து நல்லதொரு தீர்வு பிறக்கும்வரை போராட முடியுமா அல்லது தன்னுடைய அரசியல் லாபத்தை கணக்கிட்டபின் இதற்கு ஒரு முடிவு எடுப்பார்களா? சில சூடான ஊடக அறிக்கைகளை மட்டும் கொடுத்து அப்போதைய சூழ்நிலையை மேலும் சூடாக்கி, அதில் குளிர்காய்ந்த பின் இவ்விவகாரம் மறக்கப்பட்டுவிடுமா? குகனின் மரணத்தை ஒட்டுமொத்த மலேசியர்களின் பிரச்சனையாக பார்க்காது, மலேசிய இந்தியர்களின் பிரச்சனை என உவமையாக்கி அவர்கள் பார்த்தால் நான் கூறியபடியே அவர்களின் நடத்தை வெளிப்படும்.

காத்திருந்து பார்ப்போம்...

(திரு.நரகன்)

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP