பினாங்கில் அம்னோ, பெர்காசா குண்டர் கும்பலின் அராஜகம்!
>> Wednesday, June 29, 2011
பாட்டாளி மக்களின் பிரதிநிதியை கம்யூனிசவாதி என முத்திரைக் குத்தும் அம்னோ அரசாங்கம்!
>> Monday, June 27, 2011
கல்வித்துறையில் தொடர்ந்து எட்டி உதைக்கப்படும் இந்திய மாணவர்கள்!
>> Saturday, June 18, 2011
நேற்று 17 சூன் 2011 பினாங்கு வடகிழக்கு மாவட்ட காவல்த்துறை நிலையத்தில் இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியினர் இந்திய மாணவர்களுக்கு எதிராக தொடர்ந்து தொடுக்கப்பட்டு வரும் ஓரங்கட்டுதலை எதிர்த்து புகார் செய்துள்ளனர். அரசு கல்வி உபகாரச் சம்பளம் மற்றும் பிற கல்வி வாய்ப்புகள் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஏழை இந்திய மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்துவருவதை இண்ட்ராஃப் மக்கள் சக்தி இயக்கம் கடுமையாக கண்டிப்பதாக இண்ட்ராஃப் ஆலோசகர் திரு.கணேசன் கூறினார்.நாடுதழுவிய நிலையில் செய்யப்பட்ட புகார்கள் சேகரிக்கப்பட்டு மலேசிய ஐக்கிய நாட்டவை அலுவகத்தில் அடுத்த வாரம் 22 சூன் 2011-ல் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தனிப்பட்ட முறையிலோ அல்லது இயக்கம்வழி செய்த புகார்களையோ சமர்ப்பிக்க எண்ணம் கொண்டவர்கள் மனித உரிமைக் கட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
http://www.humanrightspartymalaysia.com/contact-us/
போராட்டம் தொடரும்...
15/38 திட்டம்!
>> Tuesday, June 7, 2011
இந்திய மலேசியர்களின் பெரும்பான்மை தொகுதிகளை உருவாக்கி அரசியல் பலம் பெருவதற்கு, "15/38 அரசியல் தன்னாளுமை வியூகத்திற்கு" நம்மால் ஆன ஆதரவினை வழங்குவோம். தேசிய வளர்ச்சி வெள்ளோட்டத்தில் இந்தியர்களின் பங்கினை அதிகரிப்பதற்கும், இனவாத, மதவாத கொள்கைகளை வேரறுப்பதற்கும் நமக்குத் தேவையான அரசியல் பலத்தினை உண்டாக்குவோம்!