மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் இருவர் கைது!

>> Sunday, March 1, 2009


நேற்று பிரிக்பீல்ட்ஸ் காவல்நிலையத்தில் திரு.உதயகுமாருக்கு முறையான சிகிச்சை வழங்கத் தவறிய அரசாங்கத்திற்கும், கெம்தாவிற்கும் எதிராக புகார் கொடுக்கச் சென்றிருந்த ஆதரவாளர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டு பின் சாமினில் விடுவிக்கப்பட்டனர். கைதானவர்களில், ராட்டினம் வலைப்பதிவர் திரு.மதுவும், தமிழ் இண்ட்ராஃப் பதிவர் திரு.தமிழ்ச்செல்வனும் அடங்குவர்.


போராட்டத்திற்காக தோல்கொடுத்த அன்பர்களிருவரின் துணிச்சலைப் பாராட்டுவதோடுஓலைச்சுவடியின் சார்பில் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியும் அடைகிறேன். அன்பர்களிருவரையும் முன்மாதிரியாகக் கொண்டு பல இளைஞர்கள் போராட்டத்திற்கு துணிந்து தோல்கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். நாம் முன்னெடுத்துள்ள இப்போராட்டமானது விரைவில் தன் இலக்கை எட்டிட ஒற்றுமையோடு களத்தில் இறங்குவோமாக..

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP