ஒப்பிட்டேன் ஓலமிட்டேன் - நூல் வெளியீடு

>> Tuesday, November 15, 2011

கடந்த இரண்டாண்டுகளாக மலேசிய நண்பனில் அரசியல் ஆய்வாளர் திரு.ஆ.திருவேங்கடத்தின் கைவண்ணத்தில் வாராந்திரக் கட்டுரையாக வெளிவந்த ‘ஒப்பிட்டேன் ஓலமிட்டேன்’ எனும் அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் தற்போது நூல் வடிவம் கண்டுள்ளன. மலேசியத் தமிழர்கள் மத்தியில் விரும்பிப் படிக்கப்பட்ட இவ்வரசியல் ஆய்வுக் கட்டுரைகளில் மத்திய மாநில அரசாங்கங்கள் இந்திய மலேசியர் சமூகத்தின் மீது கொண்டுள்ள உண்மைக் கண்ணோட்டங்கள் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் அலசப்பட்டுள்ளன. நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளால் சிறுபான்மை இந்திய சமூகம் எப்படியெல்லாம் நார் நாராக திரிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ளது என ஆ.திருவேங்கடம் தமக்குரிய பாணியில் எளிமையான தமிழில் பக்கச்சார்பில்லாத ஆய்வுக் கட்டுரைகளை படைத்திருக்கிறார்.

நூல் வெளியீடு குறித்த அழைப்பிதழை அழைப்பாக ஏற்று இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து நூலைப் பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் தகவல்களுக்கு அழைப்பிதழைக் காணவும்.



பினாங்கின் கடைசி தமிழர் பாரம்பரிய கிராமமாகத் திகழ்ந்த புவா பாலா கிராம நில விவகாரம் குறித்து அவர் அளித்த பேட்டியினைக் காணவும்.

பாகம் 1


பாகம் 2


பாகம் 3


பாகம் 4

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP