விபத்தொன்றில் உடல் பாதி செயலிழந்த சந்திரனுக்கு உதவுங்கள்!

>> Saturday, October 27, 2012

கைக்குழந்தையாக இருக்கும்போதே அன்னையின் அரவணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் 15 வயதுவரை தன் தந்தையுடன் ஏழ்மை வாழ்க்கை நடத்தி, தன் தந்தையின் இறப்பிற்குப் பிறகு சுயகாலில் உழைத்து நண்பர்களின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார் திரு.சந்திரன். இருப்பினும், அவரின் போதாத காலம், கடந்தாண்டு நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் தன் உடலின் ஒரு பாதி செயலற்ற நிலைக்கு தள்ளப்பட, இன்று ஒரு காப்பகத்தில் படுத்த படுக்கையாகிக் கிடக்கிறார் திரு.சந்திரன். பினாங்கு பொது மருத்துவமனையில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த சந்திரனை, பினாங்கு இந்து சங்க உதவித் தலைவர் திரு.முருகையா அவர்கள் பலவிடங்களில் முயற்சி செய்து இறுதியில் பெதேஸ்தா எனும் முதியோர் காப்பகத்தில் அவரைத் தற்காலிகமாகத் தங்கவைத்துள்ளார். சந்திரனின் அன்றாட மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட பெதெஸ்தா முதியோர் காப்பகத்தின் தோற்றுநர் திரு.தேவராசு மற்றும் பினாங்கு இந்து சங்க உதவித் தலைவர் திரு.முருகையா ஆகியோர் பலவகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். திரு.சந்திரனின் நிலையை உணர்ந்து அவருக்கு உரிய உதவிகளைச் செய்ய எண்ணம் கொண்ட நல்லுள்ளங்கள், கீழ்காணும் காணொளியைக் காண்டு, அதன்வழி மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Read more...

பாதுகாப்பற்ற சூழ்நிலையில் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி

>> Sunday, August 12, 2012

கடந்த 66 ஆண்டுகளாக சீனர் நிலத்தில் இயங்கிவரும் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு நிரந்தர தீர்வு எப்போது? கேட்கின்றனர் பள்ளியின் மேலாளர் வாரிய உறுப்பினர்கள். செவிட்டு மத்திய மாநில அரசாங்கங்களுக்கு விளங்குமா இவர்களின் கோரிக்கை? போராட்டம் தொடரும்...

Read more...

பழமைகளை விரும்பும் ஜோடி

>> Monday, June 4, 2012

’ஒருவரின் குப்பை மற்றொருவருக்கு புதையலாகிறது’ என்பது எவ்வளவு உண்மை என்பதனை பிரகாஷ், புனிதா தம்பதியரைக் கண்டவுடன் தெரிந்து கொண்டேன். கடந்த ஜூன் 2-ல் பினாங்கு டத்தோ கிராமாட் எனும் இடத்தில் இவ்விருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பலமுறை அவர்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நாளிகைகளிலும் பார்த்திருந்தபோதிலும் நேரில் சந்தித்து அவ்விருவரும் மேற்கொண்டிருக்கும் அரிய முயற்சியினை காணும்பொழுது ஒரு பிரமிப்பு எனக்குள் ஏற்பட்டது. தமிழர்கள் மற்றும் பெரானாக்கான் இனத்தவர் பயன்படுத்திய பழமையான பொருட்களை சேகரித்துவரும் இவர்கள் இதுவரை 1,400 வகையான பழம்பொருட்களை தங்களுடைய அடுக்குமாடி வீட்டில் பொதுமக்கள் பார்வைக்காக பாதுகாத்து வருகின்றனர். 200 ஆண்டுகால மலேசியத் தமிழர்களின் வரலாற்றை பரைச்சாற்றும் கண்காட்சியகம் ஒன்றினை பினாங்கில் திறக்க வேண்டும் என்பதே இவர்களின் எதிர்கால ஆசை. இவர்களின் கனவை மெய்யாக்க வேண்டியது ஒவ்வொரு மலேசியத் தமிழர்களின் கடமையல்லவா? இதோ அவர்களை நான் பேட்டிக் கண்ட காணொளி உங்களின் பார்வைக்காக...

Read more...

இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா 2012

>> Tuesday, May 29, 2012

கடந்த மே திங்கள் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, பினாங்கு மாநில அளவிலான 2012-ஆம் ஆண்டின் இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது. மேலும் படிக்க : http://cj.my/post/65809/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/

Read more...

மலேசிய மக்கள் நிருபர்களின் வருடாந்திர மாநாடு 2012

>> Thursday, May 10, 2012

எதிர்வரும் மே 18 தொடங்கி மே 20 வரை மலேசிய மக்கள் நிருபர்களின் மூன்றாவது வருடாந்திர மாநாடு, பினாங்கு ரோயல் தங்கும் விடுதியில் நடைப்பெறவுள்ளது. நாடுதோறும் இயங்கி வரும் சுமார் 100 மக்கள் நிருபர்கள் இம்மாநாட்டில் பேராளர்களாகக் கலந்துகொள்ள வருகின்றனர். 2008-ஆம் ஆண்டில் மலேசியா கினி எனும் இணைய ஊடகத்தின் உதவியினால் தொடங்கப்பட்ட 'மக்கள் நிருபர்' எனும் இயக்கம் தற்சமயம் மிகவும் மும்முரமாக சமூக, பொருளாதார, அரசியல் சார்ந்த செய்திகளை காணொளி, கட்டுரைகள், நிழற்படங்களின்வழி வழங்கிவருகின்றனர். மலேசிய மக்கள் நிருபர்கள் எனும் இயக்கம் நாடு தழுவிய நிலையில் பலதரப்பட்ட மக்களுக்கு இலவசமாக பயிற்சிகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கதாகும். மலேசிய மக்கள் நிருபர் இணையத்தளம் : cj.my

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP