முருகனுக்கு காவடியேந்தும் ஆஸ்த்ரேலியர்

>> Monday, February 4, 2013

வருடந்தோரும் தைப்பூசத்தன்று பத்து மலையில் காவடியெடுக்கும் ஆஸ்த்ரேலியரான முனைவர் கார்ல் வடிவேலா பெல் உடனான ஒரு நேர்க்காணல்.

.

Read more...

காணொளி - விஸ்வரூப திரைப்பட தடை குறித்து மலேசியத் தமிழர்கள் அதிருப்தி!

>> Wednesday, January 30, 2013

Read more...

பினாங்கில் இடைநிலைத் தமிழ்ப் பள்ளி அமைக்கக்கோரி கையெழுத்து வேட்டை

>> Tuesday, January 29, 2013



 பினாங்கு இந்து சங்கத்தின் அறிக்கை தொடக்கத் தமிழ்ப்பள்ளிகளிலிருந்து இடைநிலைப்பள்ளிகளுக்குப் போகும் தமிழ் மாணவர்கள் தமிழைத் தொடர்ந்து படிப்பதற்குப் பலவகையில் தடைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. அவை :-

 1. எல்லா இடைநிலைப் பள்ளிகளிலும் தமிழ் வகுப்புகள் நடைப்பெறுவதில்லை.

 2. ஒரு சில பள்ளிகளில் தான் வகுப்பு நேரத்திலேயே தமிழ் பாடங்கள் போதிக்கப்படுகின்றன.

 3. அப்படியே நடைப்பெற்றாலும் ஏனோ தானோ என்றுதான் நடைபெறுகிறது. 

4. POL வகுப்புகள் மார்ச் மாதத்திற்குப் பிறகுதான் நடத்தப்படுகின்றன. மூன்று மாத காலம் நேர விரையம் செய்யப்படுகிறது.

 5. ஒரு சில இடைநிலைப்பள்ளிகள் தமிழ் மாணவர்கள் தமிழ் மொழிப் பாடம் PMR/SPM தேர்வில் எடுப்பதை ஆதரிப்பதில்லை.

 6. SPM இலக்கிய பாடம் பெரும்பாலான பள்ளிகளில் போதிக்கப்படுவதில்லை. அதனால் இலக்கிய பாடம் எடுக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

 7. SPM தேர்வில் 10 + 2 தமிழ் இலக்கணம் மற்றும் தமிழ் இலக்கியம் சேர்ந்து 12 பாடம் எடுத்தாலும் JPA உபகாரக் கல்வி நிதிக்கு தமிழ் பாடத்திற்கு அங்கீகாரம் தரப்படுவதில்லை.

 இவை யாவையும் கருத்தில் கொண்டு தமிழை மேம்படுத்தும் பொருட்டும் இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையிலும் பினாங்கு மாநிலத்தில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமையுமானால் ஆர்வமுள்ள மாணவர்கள் இதைப் பயன்படுத்தி இடைநிலைத் தமிழ்க் கல்வியைத் தொடர பயன்படுத்திக் கொள்வார்கள். எனவே மத்திய அரசு தமிழ் இடைநிலைப்பள்ளி அமைப்பதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டுமாய் பொதுமக்களும் அரசு சாரா இயக்கங்களும் கேட்டுக் கொள்கிறோம். இதை பினாங்கு இந்து சங்க முழுமனதோடு முன்மொழிகிறது.

Read more...

ஆஸ்கார் விருதிற்காக முதன்முறையாக தமிழ்ப்பாடல் தேர்வு!

>> Friday, January 11, 2013

அண்மையில் உலகெங்கிலும் வெளியீடு கண்டு மக்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்ற ’லைஃப் ஒப் பாய்’ எனும் திரைப்படம் 2013-ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுப் பட்டியலில் 11 வித பிரிவுகளில் முன்மொழியப்பட்டுள்ளது. 

சிறந்த இயக்குனர்

 சிறந்த திரைப்படம்

 சிறந்த திரைப்படவியல்

 சிறந்த திரைப்பட ஒளிப்பதிவு

 சிறந்த அசல் இசை

 சிறந்த அசல் திரைப்பாடல்

 சிறந்த உற்பத்தி வடிவமைப்பு

 சிறந்த திரைப்பட ஒலிப்பதிவு

சிறந்த ஒலிகலப்பு

 சிறந்த திரைப்பட காட்சி வடிவமைப்பு

 சிறந்த ’தழுவல் செய்யப்பட்ட’ திரைக்கதை

 இதில் சிறந்த அசல் திரைப்பாடலுக்காக பாடகி பாம்பே ஜெயஸ்ரீ எழுதிப் பாடிய ‘கண்ணே கண்மணியே’ எனும் தமிழர்களின் தாலாட்டுப் பாடல் ஆஸ்கார் விருதிற்காக முன்மொழியப்பட்டுள்ளது. இதன்வழி ஆஸ்கார் விருதிற்காக முன்மொழியப்பட்ட முதல் தமிழ்ப்பாடல் எனும் பெருமையை பாம்பே ஜெயஸ்ரீ தமிழர்களுக்காகப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். அதே சமயம் சிறந்த அசல் இசைக்காகவும் இப்பாடல் முன்மொழியப்பட்டுள்ளது. இப்பாடல் ஆஸ்கார் விருதினைப் பெற வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்போம். மைக்கல் டானா இசையமைப்பில் பாம்பே ஜெயஸ்ரீயின் மயங்க வைக்கும் குரலில் இதோ தமிழர்களின் தாலாட்டுப் பாடல்.

Read more...

கோரப்படாத இறந்த உடல்களுக்கு இறுதிக் காரியம் - பினாங்கு இந்து சங்கத்தின் அளப்பரிய தொண்டு

>> Monday, October 29, 2012

கடந்த 27 ஆண்டுகளாக பினாங்கு மற்றும் கெடா மாநிலங்களில் கோரப்படாத இறந்த உடல்களை எடுத்து அடக்கம் மற்றும் எரிக்கும் சேவையை மேற்கொண்டு வருகின்றனர் பினாங்கு இந்து சங்கத்தினர். அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு உதவியும் கிடைக்காத பட்சத்தில், பொதுமக்கள் அளிக்கும் நன்கொடைகளைக் கொண்டே இச்சேவையை அவர்கள் செய்துவருகின்றனர். இதுவரையில் 500 இறந்த உடல்களுக்கு இறுதிக் காரியங்களைச் செய்துள்ளனர். கோரப்படாத உடல்களைத் தவிர்த்து, இறுதிக் காரியங்களைச் செய்விக்க இயலாத ஏழைக் குடும்பங்களுக்கும் இவர்களின் உதவி கிட்டியுள்ளது. அண்மையில் இவர்களின் சேவையைக் கண்டு பேட்டியெடுக்கச் சென்றிருந்தேன். அதன் காணொளி இதோ உங்கள் பார்வைக்கு. இதுபோன்ற தன்னலமில்லாத சமூகச் சேவைகளைக்கு பொதுமக்களாகிய நாம்தான் உதவிக் கரம் நீட்ட வேண்டும். பினாங்கு இந்து சங்க செயல்பாடுகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி புரிய எண்ணம் கொண்டால், அவ்வியக்கத்தின் துணைத் தலைவரை அலைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம். திரு.முருகையா 016-4449246

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP