சீலன் பிள்ளையின் மூன்றாம் நாள் போராட்டம்..

>> Thursday, January 3, 2008

மூன்றாவது நாளாக சீலன் பிள்ளையின் உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது. இன்றுக் காலையில் சீலன் சிங்கப்பூருக்கான மலேசிய தூதரைச் சந்தித்து பேசுவதற்காக ஒரு சந்திப்பு நடைப்பெற வேண்டும் எனக் கருதி அங்குள்ள பாதுகாவலர்களிடம் கேட்டிருக்கிறார். பிறகு தொலைப்பேசியில் அவர்கள் தூதரின் பணிமனைக்கு அழைத்து கேட்ட போது, தூதரின் செயலாளர் தற்போது தூதர் அங்கு இல்லை எனவும், அவர் எப்பொழுது திரும்புவார் எனத் தமக்குத் தெரியாது எனவும் பதிலளித்து உள்ளார்.

இவ்வுண்ணாவிரதப் போராட்டத்தை அறிந்த மலேசிய அரசாங்கம், உடனடியாக சிங்கப்பூர் மலேசிய தூதரகத்தின் வெளியில் நடைப்பெறும் போராட்டம் தொடர்பான படங்கள் மற்றும் தகவல்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டது. இதற்கிடையில் தூதரகத்தில் பணிப்புரியும் சிலர் புகைபடக்காரர்களாக மாறி, சீலனைப் படம் பிடித்தனர். அதில் ஒருவர் தூதரகத்தில் பழுது பார்க்கும் வேலைகளில் ஈடுபடுபவராம்..

மூன்றாம் நாள் படக்காட்சிகள்





நன்றி : அங்கிள் யாப் & ராஜா (படக்காட்சி, செய்திகள்)

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP