லீ குவான் யூவின் கீழ் ஒரு தேசம்..

>> Tuesday, May 20, 2008


தென்கிழக்காசிய நாடுகளிலேயே மிகவும் வளர்ச்சி அடைந்த நாடு எனக் கருதப்படுவது சிங்கப்பூர் எனும் குட்டித் தீவுதான். 1959 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தன்னாட்சி பெற்று, 1963 ஆம் ஆண்டில் மலேசியாவுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது. 1965 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து முழு சுதந்திரம் பெற்று குடியரசாக உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் உலகிலேயே செல்வம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக மாறியது.

இத்தகு வளர்ச்சிகளை அந்நாடு பெற்றிருப்பினும், குடிமக்களின் கருத்து சுதந்திரம் பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருவதை யாராலும் மறுக்க முடியாது. கருத்துச் சுதந்திரத்திற்காக போராடுபவர்களை உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் பேரில் கைது செய்வது நம் நாட்டில் வழக்கமாகிவிட்டது என்றாலும், சிங்கப்பூரும் மலேசியாவிற்கு சளைத்தது அல்ல என கடந்த காலங்களில் அது நிரூபித்து வந்துள்ளது. அந்நாட்டிலும் இ.சா சட்டம் இன்றளவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகிறது.

லீ குவான் யூவின் ஆட்சி காலத்தில் திட்டமிட்டு மக்களின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கிய நிரூபணங்கள் ஓர் ஆவணப்படமாகத் தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இதோ அதன் படச்சுருள் :-

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP