காவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..? (பகுதி 2)

>> Monday, January 26, 2009



காவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..? (பகுதி 1)

6. மெஜிஸ்ட்ரேட்டின் காவல் தடுப்பு ஆணை

6.1 மெஜிஸ்ட்ரேட் என்பவர் யார்?

மெஜிஸ்ட்ரேட் என்பவர் ஒரு நீதித்துறை அதிகாரி. அவர் 24 மணி நேரத்திற்கு மேல் உங்களை தடுத்து வைப்பதற்கு, 'காவல் தடுப்பு ஆணை' பிறப்பிக்க அதிகாரம் உள்ள நீதித் துறை அதிகாரி ஆவார்.

6.2 காவல் தடுப்பு ஆணையின் நோக்கம்

  • உங்கள் மீது குற்றம் சுமத்த சான்றுகள் உள்ளதா என்பதனைக் கண்டறியகாவல்த்துறையினருக்கு கால அவகாசம் வழங்குதல்
  • உங்களிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டும் எனும் காரணத்திற்காக காவல்தடுப்பு ஆணை பெற முடியாது

6.3 காவல் தடுப்பு ஆணையின் கால அளவு

24 மணி நேரத்திற்கு மேற்பட்ட காவல் நீட்டிப்பிற்காக, மெஜிஸ்ட்ரேட் முன்பு நீங்கள் நிறுத்தப்படும்பொழுது, அதற்கான காரணங்களை காவல்த்துறை அதிகாரி மெஜிஸ்ட்ரேட்டிடம் தெரிவிக்க வேண்டும். காவல்த்துறையினரை முன் வைத்து காரணங்களை கவனமாக பரிசீலிக்க வேண்டியது மெஜிஸ்ட்ரேட்டின் கடமை.

வழக்கமாக காவல்த்துறையினர் 14 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான நாட்களுக்கு காவல் நீட்டிப்பு கோருவர்.

காவல்த்துறையினரின் கோரிக்கையை கவனமாக பரிசீலித்தப் பிறகு அதனை நிராகரிப்பதற்கும் / அவர்களுடைய கோரிக்கைக்கும் குறைவான நாட்களுக்கு காவல் தடுப்பு ஆணை வழங்குவதும் மெஜிஸ்ட்ரேட்டின் விருப்புரிமை.

காவல்த்துரையினர் ஒன்றுக்கும் மேற்பட்ட காவல் நீட்டிப்பு ஆணையினை கேட்க முடியும்.

எப்படியாயினும், உங்களை 15 நாட்களுக்கு மேல் தடுத்து வைக்க முடியாது.

6.4 காவல் நீட்டிப்பிற்காக நீங்கள் மெஜிஸ்ட்ரேட் முன்பு நிறுத்தப்படும்பொழுது என்ன செய்ய வேண்டும்?

மெஜிஸ்ட்ரேட்டிடம் கீழ்கண்டவற்றை கோருங்கள்.

  • உங்களை பிரதிநிதிக்க வழக்கறிஞர் தேவைப்படுவதால் சட்ட உதவிமையத்துடனோ குடும்பத்தாருடனோ தொடர்புக் கொள்ள அனுமதி கோருங்கள்.
  • உடல் நிலை குறைவாக இருந்தாலோ / அடித்து துன்புறுத்தி இருந்தாலோமுறையான மருத்துவ சிகிச்சை கோருங்கள்.
  • காவல்த்துறையினர் உங்களை பயமுறுத்தி இருந்தாலோ அடித்திருந்தாலோஅதனை தெரிவியுங்கள்
  • முறையான உணவு, நீர், உடை, கழிவறை அல்லது மருத்துவ உதவிமறுக்கப்பட்டிருந்தால் அதனையும் தெரிவியுங்கள்.
  • நீங்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொழுது காவல்த்துறையினர் விசாரணைமேற்கொண்டாரா என்பதையும் தெரிவியுங்கள்

6.5 குறைவான நாட்களுக்கான காவல் தடுப்பு ஆணையைக் கேளுங்கள்.

மெஜிஸ்ட்ரேட் காவல் தடுப்பு ஆணை பிறப்பிப்பதற்கு முன்பதாகவே, காவல்த்துறையினர் கேட்டதற்கும் குறைவான நாட்களுக்கு காவல் நீட்டிப்பினைக் கோருங்கள். அதற்கான காரணங்களையும் முன் வையுங்கள். (.கா காவல்த்துறையினரின் விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பேன். தேவை ஏற்பட்டால் நானே முன் வருவேன்)

7. கைது செய்வதற்கு முன்பதாக மேற்கொள்ளப்படும் உடல் சோதனை

7.1 எப்பொழுது இதனை செய்ய முடியும்?

நீங்கள் மதுபான கடைகளில் இருக்கும்பொழுது காவல்த்துறையினர் போதைப் பொருள் சோதனை மேற்கொண்டால், உங்கள் உடலையும் பைகளையும் சோதனை செயவதற்கு காவல்த்துறையினருக்கு அதிகாரம் உண்டு.

இன்ஸ்பெக்டர் அல்லது அதற்கும் மேற்பட்ட பதவியில் இருக்கும் அதிகாரியின் முன்னிலையில் மட்டுமே சோதனையை மேற்கொள்ள முடியும்.

7.2 அப்பொழுது என்ன செய்ய வேண்டும்.

உங்கள் சட்டைப் பையில் / பைகளில் கைகளை விட காவல்த்துறையினரை அனுமதிக்காதீர்கள்.

நீங்களாகவே முன் வந்து உங்கள் சட்டைப் பையில் / பைகளில் உள்ளவற்றை காவல்த்துறையினர் முன்னிலையில் வெளியில் எடுங்கள்.

சட்டைப் பையில் / பைகளில் உள்ள பொருட்களை எடுத்து வெளியில் வைக்கும்பொழுது, ஒவ்வொரு முறையும் இதுபணப்பை’ , ‘சாவி’ , ‘அடையாள அட்டைஎன ஒவ்வொன்றாகச் சொல்லுங்கள்.

உங்களுடைய சட்டைப்பை / பை காலியானப் பின், உண்மையிலேயே காலியாகிவிட்டது என்பதை காண்பியுங்கள்.

7.3 உங்கள் உரிமைகள்

ஒரு பெண்ணை பெண் காவல்த்துறை அதிகாரியே சோதனை செய்ய முடியும்.
உடல் சோதனைகள் தக்க பண்புடன் மேற்கொள்ள வேண்டும் (.கா உங்கள் மறைவிடங்களைத் தொடக் கூடாது)

ஆடைகளைக் களைந்து சோதனை மேற்கொள்வதற்கு சட்டத்தில் இடம் இல்லை.

8. கைது செய்யப்படும்பொழுது மேற்கொள்ளப்படும் உடல் சோதனை

8.1 எப்பொழுது இச்சோதனையை செய்ய முடியும்?

நீங்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தால் அந்த குற்றம் புரிந்ததற்கான பொருட்கள் உங்களிடம் இருக்கின்றதா என்பதை உறுதி செய்ய உங்கள் உடலை சோதனை செய்யலாம்.

உங்கள் உடலை தனிப்பட்ட இடத்தில் சோதனை செய்ய வேண்டும். தனிப்பட்ட இடத்தில் சோதனை மேற்கொள்ள கோருவது உங்கள் உரிமை.

8.2 ஆடைகளை களைந்து சோதனை மேற்கொள்வது.

  • உங்களைக் கட்டாயப்படுத்தி ஆடைகளைக் களைந்து சோதனைமேற்கொள்வதற்கு சட்டத்தில் இடமில்லை.
  • நீங்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் கூட, ஆடைகளைக் களைய உங்களைகட்டாயப்ப்டுத்தினாலோ / பயமுறுத்தினாலோ
  • கண்டனம் தெரிவியுங்கள்.
  • அந்த காவல் அதிகாரியின் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்னர் அந்த சம்பவத்தை புகார் செய்யுங்கள்.

9. கைது செய்யப்பட்ட பின்னர் விசாரிக்கப்படுகிறீர்கள்

9.1 கேள்வி கேட்கும் அதிகாரியின் அடையாளம்

கேள்விகள் கேட்கும் காவல் அதிகாரியின் பெயரை / பதவியைக் குறித்து கொள்ளுங்கள்.

9.2 எதற்கும் பதிலளிக்காமல் மௌனமாக இருக்க உரிமை உண்டு.

காவல் அதிகாரி முதலில் நட்பு முறையாக உங்களோடு உரையாடுவார் (.கா. உங்களைப் பற்றியும் குடும்பம் மற்றும் நண்பர்கள் பற்றியும் விசாரிப்பர்) அவ்வேளையில் கனிவாக நடந்துக் கொள்ளுங்கள். மேற்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பாவிட்டால் மௌனமாக இருக்க பயம் கொள்ளக்கூடாது. அது உங்கள் உரிமை.

9.3 காவல்த்துறையினர் எழுத்துப் பூர்வமான (113 / பதிவறிக்கை) வாக்குமூலத்தை உங்களிடத்தில் வேண்டுகின்றனர்.

காவல்த்துறை அதிகாரி கேள்விகள் கேட்டபிறகு, அதற்கு அளிக்கப்படும் பதில்களை பதிவு செய்து கொள்வார்.

உங்கள் பெயர், முகவரி, ..எண், செய்யும் வேலை போன்ற முகாமை விபரங்களை அளித்தப்பிறகு ஏனைய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மௌனமாக இருக்க உங்களுக்கு உரிமை உண்டு.

நீங்கள் மௌனமாக இருக்க விரும்பினால்நீதிமன்றத்தில் எல்லா பதில்களையும் சொல்கிறேன்.” என சொல்லுங்கள்.

9.4 காவல்த்துறையினர் உங்களை கட்டாயப்படுத்தி எழுத்துப் பூர்வமாக வாக்குமூலத்தை பதிவு செய்ய முடியாது. முகாமை விபரங்களை கொடுத்தப் பிறகு, எழுத்துப் பூர்வமாக வாக்குமூலம் அளிக்க கட்டாயப்படுத்தினால் பொறுமையுடன் தொடர்ந்து மௌனமாக இருங்கள்.

உங்களை பயமுறுத்தினாலோ, அடித்தாலோ, வற்புறுத்தியோ எழுத்துப் பூர்வமான வாக்குமூலத்தினை பதிவு செய்ய காவல்த்துறையினருக்கு உரிமை இல்லை.

உங்களை பயமுறுத்தி அடித்து, வற்புறுத்தி எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தை பதிவு சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது உடனடியாக அவரைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள். இது உங்கள் உரிமை.

9.5 113/ பதிவறிக்கையினை நீங்கள் வழங்க விரும்பினால்
பத்திகள், 3.3-ஐயும் 3.4-ஐயும் பின்பற்றுங்கள்.

தாள் அல்லது குறிப்பு புத்தகம் இல்லையெனில் காவல்த்துறையினரிடம் கேட்டுப் பெறுங்கள்.

உங்களுடைய 113 பதிவறிக்கை, நீதிமன்றத்தில் கீழ்கண்டவற்றை உறுதிபடுத்த உங்களுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்புள்ளது.

உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டீர்கள் ; அல்லது
நீங்கள் ஒப்புக் கொண்டுள்ள சில விபரங்கள், நீங்கள்தான் குற்றவாளி என்பதனை உறுதிப்படுத்துகின்றது.

இதுவரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்களை முடிந்தால் தெரிந்தவர்களுடமோ, நண்பர்களிடமோ பகிர்ந்துக் கொள்ளுங்கள். முடிந்தால், இதனை ஒரு கையடக்க புத்தகமாக அச்சிட்டு விநியோகியுங்கள்.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

raja January 28, 2009 at 1:25 AM  

மிக ! மிக ! முக்கியமான ! அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒரு செய்தியை பிரசித்திருக்கிறீர்கள் !

மிக்க நன்றியும் ! வாழ்த்துக்களும் !

A N A N T H E N January 29, 2009 at 1:36 PM  

தமிழில் இந்த விழிப்புணர்வைப் பற்றி இட்டதுக்கு நன்றி...

நான் தெரிஞ்சிக்க வேண்டியதும் நிறைய இருக்கு...

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP