”புவா பாலா கிராமத்தை உடைக்கக்கூடாது!” - இண்ட்ராஃப் மனு

>> Wednesday, July 1, 2009

நேற்று 30/06/2009 காலை 10 மணியளவில் இண்ட்ராஃபினரும் புவா பாலா மக்களும் இணைந்து பினாங்கு மாநில அரசினிடம் மனு கொடுக்கச் சென்றுள்ளனர். திரு.வேதமூர்த்தியின் மகள் வைசுணவியும் புவா பாலா குழந்தைகளும் அம்மனுவை பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கின் அந்தரங்கச் செயலாளரிடம் ஒப்படைத்தனர். அந்நிகழ்வின் காணொளி காட்சி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அன்று மாலை 4 மணியளவில் நாடு தளுவிய அளவில் சனநாயக செயல் கட்சியின் மாநில தலைமை அலுவலகங்களின் முன்பு இண்ட்ராஃப் அமைதி மறியலில் இறங்கியது. ஈப்போ, பினாங்கு, சிரம்பான், பெட்டாலிங் செயா ஆகிய இடங்களில் சிறிய அளவில் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் அமைதி மறியலில் ஈடுபட்டனர். பினாங்கு கொம்தார் கட்டிடத்தின் கீழ்தளத்தில் புவா பாலா மக்களும் இண்ட்ராஃப் ஆதரவாளர்களும் திரளாகத் திரண்டு மாலை 4 தொடங்கி இரவு 8 மணிவரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வமைதி போராட்டம் நடைப்பெற்ற இடத்திற்கு இறுதிவரை பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்கும், மூன்றாவது துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியும், பாதிக்கப்பட்ட பகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சனீசுவர நேதாசி இராயர், புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் கர்பால் சிங் மற்றும் பிற மக்கள் கூட்டணி இந்திய அரசியல் தலைவர்கள் யாரும் வருகைத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அந்நிகழ்வின் காணொளி காட்சி அடுத்தப் பதிவில் வெளிவரும்..

பாகம் 1



பாகம் 2



பாகம் 3



அடுத்தப் பதிவில் மேலும் செய்திகள் விரிவாக..

போராட்டம் தொடரும்..

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP