அமைதிப் பேரணித் தொடர்பான முக்கியச் செய்திகள்

>> Monday, November 26, 2007




1. துன் ராசாக் சாலையில் 4 ஆடவர்கள் FRU வேன்களில் ஏற்றப்பட்டு அடிக்கப்பட்டுள்ளனர்.

2. ஜொகூரில் இருந்து வந்த செல்வகுமரன், ரவி, மகேந்திரன், இராஜசேகரன், கிருஷ்ணமூர்த்தி, பாலா மற்றும் சிவா என்பவர்கள் கோலாலம்பூர் தங்கும் விடுதியில் காலை 7.30 மணிபோல் கலகத்தடுப்புக்காரர்களால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

3. நிறைய இந்தியர்கள் KLCC முன்பு அமிலம் கலந்த நீரினால் தாக்கப்பட்டுள்ளனர்.

4. பத்து மலையில் 6 பேர் கைது செய்யப்பட்டு IPK KL-லில் அடைக்கப்பட்டுள்ளனர்.

5. ஜாலான் ஈப்போவில் 3 பேருந்துகள், ஜாலான் புவில் 2 பேருந்துகள், கூலீமிலிருந்து வந்த 5 பேருந்துகள் கோலாலம்பூரில் தடுக்கப்பட்ட வேளை அனைவரும் KLCC-க்கு நடந்தே சென்றுள்ளனர்.

6. காலை 8.37 மணியளவில் அருகே பரமசிவன் பிள்ளை என்பவர் கலகத் தடுப்புக்காரர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

7. பந்திங் சாலைப் பேருந்துகள் தடுக்கப்பட்டன.

8. ரவாங்கிலிருந்து 9 பேருந்துகள் போலீசாரால் தடுக்கப்பட்டன. ஜாலான் டூத்தாவில் 5 பேருந்துகள் தடுக்கப்பட்டுள்ளன. ஜாலன் டிஞ்ஜாயில் 20 இந்தியர்கள் கைதுச் செய்யப்பட்டதோடு கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டு 100ப் பேர்கள் காயமடைந்துள்ளனர்.

9. பத்து மலையில் 1 பேருந்து எரிக்கப்பட்டும், 20 மோட்டார் சைக்கிள்கள் போலீசாராலும் , மலாய் குண்டர் கும்பல்களாலும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 100ப் பேர்கள் கலகத்தடுப்புக்காரர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

10. காலை 8.15 மணியளவில் ஜாலான் டூத்தாவில் 3 வாகனங்கள் போலிசாரால் தடுக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய அடையாள அட்டைகளைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அதோடு 8ப் பேர்கள் கடுமையாக போலீசாரால் தாக்கப்பட்டுள்ளனர்.

11. காலை மணி 9.45 மணியளவில் பழைய கிள்ளான் சாலையில் 5 பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டன. 100 பெரிய மோட்டார் சைக்கிள்கள் வழி இந்தியர்கள் KLCC-க்குப் படையெடுத்தனர்.

12. பினாங்கு ஜுருவில் 4 பேருந்துகளும், சுங்கை பட்டாணியில் 2 பேருந்துகளும் போலீசாரல் தடுக்கப்பட்டனர். பழைய கிள்ளான் சாலையில் பொதுப்பேருந்தான METRO BUS இந்தியப் பயணிகளை ஏற்ற மறுத்துள்ளது.

13. பத்து மலையில் 400 இந்தியர்கள் போலீசாரால் கைதுச் செய்யப்பட்டு IPK KL-க்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். அதில் 19 பேர்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருகிறார்கள்.

14. தைப்பிங்கிலிருந்து 3 பேருந்துகள் தடுக்கப்பட்டன. 100ப் பேர்கள் IPK KL-க்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.

மூலம் : http://www.policewatchmalaysia.com/

என் நிழற்படக்கருவியில் பதிந்தக் காட்சி

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP