வேதமூர்த்திக்கு கைதா, விடுதலையா? கேள்வி நிராகரிக்கப்பட்டது..!

>> Thursday, June 26, 2008

பத்து தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா, தற்போது இலண்டனில் வசித்துவரும் இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர் திரு.வேதமூர்த்தி மீண்டும் மலேசியாவிற்கு வந்தால், அவர் நிலை என்ன? கைது செய்யப்படுவாரா? அப்படி கைது செய்யப்பட்டால் எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்? எனும் கேள்விகளை மக்களவையில் சமர்ப்பித்தபோது நிரூபணமில்லாத கேள்விகளைக் கேட்கக் கூடாது என பதில்கடிதத்தில் மறுமொழியிட்டு அக்கேள்விகளை 23,1(H) விதிமுறையின் கீழ் மக்களவை நிராகரித்துவிட்டதாகக் கூறினார்.

தாம் நிரூபணமில்லாத கேள்விகளைக் கேட்கவில்லையெனவும், அரசாங்கம் சட்ட திட்டங்களை அமல்படுத்துவதில் வெளிப்படையான போக்கை கடைப்பிடிக்குமாறு நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற நிருபர் கூட்டத்தில் அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசியா கினி படச்சுருள்


Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP