இந்துராப்பு தலைவர்களின் விடுதலைக்கு டப்ளின் குழு கோரிக்கை..

>> Wednesday, June 25, 2008


உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இண்ட்ராப் ஐவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று டப்ளினில் அமைந்துள்ள மனித உரிமைக் கழகம் ஒன்று அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

“நியாயமான மனித உரிமை நடவடிக்கைகளுக்காக போராடிய அந்த ஐவரும் எவ்வித விசாரணையுமின்றி காவலில் வைக்கப்பட்டிருப்பதாக ,ஃப்ரண்ட் லைன் என்னும் அக்கழகம் கூறியது.

இந்திய சமுகத்தின் பிரச்னைகளுக்காக போராடிய அந்த ஐவரும்- பி.உதயகுமார், எம். மனோகரன், வி. கணபதி ராவ், டி. வசந்தகுமார், ஆர்.கெங்காதரன்- திசம்பர் 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

உடனடியாக, அவர்கள் ஈராண்டு தடுப்புக் காவலில் வைக்கப்படுவதற்காக தைப்பிங் கமுண்டிங் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

“மனித உரிமைகளுக்காக, குறிப்பாக மலேசியாவின் சிறுபான்மை இந்தியர்களின் உரிமைகளைப் பாதுகாக்க போராடியதற்காக அந்த ஐவரும் காவலில் இருப்பதாக நம்புகிறோம்”, என அக்கழகத்தின் இயக்குனர் மேரி லவ்லோர், மாமன்னர் சுல்தான் மிர்சான் சைனால் அபிடினுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நீரிழிவு நோயாளியான உதயகுமாருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு மன்னர் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் லவ்லோர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“அந்த ஐவரின் உடல் மற்றும் மன நலம் குறித்து ஃப்ரண்ட் லைன் கவலை கொள்வதாகவும்”, அவர் கூறினார்.

மலேசியாவில் மனித உரிமை போராட்டவாதிகள், அச்சமின்றி தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சூழலை அரசாங்கம் உருவாக்கித் தர வேண்டும் என்றும் அக்கழகம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

செய்தி : மலேசியா இன்று

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP