கூடிய விரைவில் புதிய பிரதமர்..
>> Friday, March 28, 2008

தற்போதைய நிலவரப்படி 36 சபா, சரவாக் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சிக்கு மாறுவதற்கு சாத்தியக்கூறுகள் மிகுந்து காணப்படுகின்றன. இந்த எண்ணிக்கையானது மலேசிய அரசியல் வரலாற்றையே புரட்டிப் போடுவதற்கு போதுமானதாகும். எதிர்க்கட்சிகள் புதிய அரசாங்கத்தை தோற்றுவிப்பதற்கு 30 சட்டமன்றங்கள் தேவையில் இருந்தாலும் தற்போது அவ்வெண்ணிக்கையானது தீபகற்ப மலேசியாவை கணக்கில் எடுத்துக் கொள்ளாமலேயே தாண்டிவிட்டதாகவும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
தற்போது சபாவில் 16 சட்டமன்ற உறுப்பினர்களும் சரவாக்கில் 20 சட்டமன்ற உறுப்பினர்களும் பாரிசானுடனான தங்கள் நிலைப்பாட்டினை ஒரு உறுதியற்றதாகவே கருதிவருவதாக அவர் மேலும் கூறினார். எனவே கூடிய விரைவில் நாம் ஒரு பிரதமரைப் ( அன்வார் இப்ராகிம் )பெறப் போகிறோம், அதற்கான நாள் 14 ஏப்ரலுக்குப் பிறகு சாத்தியமாகும் என அவர் தெரிவித்தார். அனைவரும் காலத்தை கருத்தில் கொண்டு காத்திருக்கின்றனர். அதற்கான தருணத்தை எட்டிப் பிடிக்கும் வரையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாயை மூடிக் கொண்டு இருக்கின்றனர். நானும் இதுத் தொடர்பாக அதிகம் பேசவிரும்பவில்லை என அவர் நம்பிக்கையோடு தெரிவித்தார்.
எது எப்படி இருப்பினும், நாட்டிற்கு உழைத்த, இன்னும் உழைத்துக் கொண்டிருக்கும் இந்திய சமூகத்தினரின் உரிமைகளை தற்போதைய அரசாங்கமாகட்டும் அல்லது வரப்போகும் புதிய அரசாங்கமாகட்டும், காக்கத் தவறி விட வேண்டாம்.



0 கருத்து ஓலை(கள்):
Post a Comment