மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் நிலைமை

>> Tuesday, October 2, 2007

மலேசியாவில், தமிழ்ப் பள்ளிகளின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவது நாம் அறிந்ததே. 1300- கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் இருந்த நிலைமை போய் இப்போது 523 பள்ளிகளாக குறைந்துள்ளது வருத்தத்திற்கு உரிய விஷயமே. இதுதான் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சியா?அரசியல் கட்சிகள், அரசாங்கம் உதவும் எனக் காத்திருப்பதைவிட நாம் ஆக்ககரமான செயலில் இறங்கி தமிழ்ப் பள்ளிகளை பெருக்க வழிகாண வேண்டும். மதிநுட்பம் நிறைந்த சமுதாயம் தமிழ்ப் பள்ளிகளாலேயே உருவாவது அவசியம். நம் மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றின் பாசறையாக விளங்கும் தமிழ்ப் பள்ளிகளை போற்றிக் காப்போமாக. இவ்வகையில் கட்டிட நிதி வளர்ச்சிக்காக உதவியை எதிர்ப்பார்க்கிறது ஜொகூரில் அமைந்திருக்கும் பாசீர் கூடாங் தமிழ்ப் பள்ளி. தமிழ்ச் சமுதாயம் உதவி புரிந்தால், இங்குள்ள மாணவர்கள் நல்ல நிலைமையில் கல்விப் பயில வசதியாக இருக்கும். ஏற்கனவே இப்பள்ளி கட்டிட நிதிக்காக நிகழ்ச்சிகள் நடத்தி நன்கொடைகளை பெற்றுக்கொண்டுள்ளது. தற்போது, மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் 10 கூடுதல் வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை எழுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பள்ளியைப்பற்றி, கட்டிட நிதி திரட்டும் நிகழ்ச்சிக்காக நான் எடுத்த குறும்படத்தை இங்கே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன். பள்ளியின் வளர்ச்சி நிதிக்கு உதவி புரிய விரும்புவோர், பள்ளியின் நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளவும். தற்போதைய பள்ளியின் தலைமையாசிரியராக பொறுப்பேற்றிருக்கும் திரு.நடராசன் அவர்களைத் தொடர்புக் கொள்ள இதோ பள்ளியின் தொலைபேசி எண் : +607-2521299


Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP