"நிலவுக்கொரு கடிதம்" ஒரு சிறுமியின் விண்ணப்பம்..

>> Thursday, October 25, 2007

"நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்" என்பர். ஆனால் இன்று எத்தனைக் குடும்பங்கள் தங்கள் மனநிம்மதியை இழந்து குடும்ப சீரழிவிற்கு ஆட்பட்டிருக்கின்றன.. பலவிதமான சமூக சீர்கேடுகளுக்கு மத்தியில் சிலர் சொந்த குடும்பத்திலேயே அட்டூழியங்கள் புரிவதை என்னவென்று சொல்வது..அதற்கு ஒரு உதாரணம்தான் இந்த "நிலவுக்கொரு கடிதம்" எனும் குறும்படம். வேலியே பயிரை மேய்ந்தக் கதை இது.. ஒரு மழலையின் சோகக் குரலோடு ஒலிக்கும் விண்ணப்பம். அதுவும் அந்த நிலவிடம் விண்ணப்பம் போடுகிறாள் ஒரு சிறுமி, காரணம் பல இரவுகளில் நடந்த, நடக்கவிருக்கின்ற அநியாயங்களைப் பார்த்துக்கொண்டிருப்பது அந்த நிலவுதானே...

சமுதாயத்திடம் கிடைக்காத நீதியோ என்னவோ, அவளுக்குத் துணை,அடைக்கலம் அந்த நிலவு மட்டுமே.குறைந்தபட்சம் அச்சிறுமியின் அழுகுரலைக் காது கொடுத்து கேட்கிறது அந்த நிலவு. நாம் கேட்போமா?

பொருள் புதைந்த இக்குறும்படத்தைத் தயாரித்த மலேசிய இந்தியர்களுக்கு வாழ்த்துக்கள்.மேலும் இதுபோன்று பல நல்ல விழிப்புணர்வைத் தூண்டும் பல நல்ல படங்களை அவர்கள் சமுதாயத்திற்கு வழங்க வேண்டும். சிறுவர்கள் காமப் பொருட்கள் அல்ல, அவர்கள் பூவினும் மெல்லியவர்கள் என இடித்துரைத்த இந்தக் காவியம் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாக..

இதோ அந்தச் சிறுமியின் குரல்..

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP