நவீன தமிழ் இலக்கியத்தின் புதினங்கள்

>> Tuesday, October 23, 2007




தமிழுலகில் புதினங்களைப்பற்றிப் பேசும்போது கல்கி மற்றும் அகிலனின் குழந்தைகளைக் கொஞ்சிப் பேசாமல் இருக்க முடியாது. தமிழ் நாட்டின் பண்டைய சரித்திரத்தை கலை நயத்தோடு பார்வையிட கல்கி மற்றும் அகிலனின் புதினங்களே கலங்கரை விளக்கங்களாக முன் நிற்கின்றன. நீங்கள் அந்த கலங்கரை விளக்கின் மீதேறி தமிழ் சமுத்திரத்தின் ஆழம் காண முற்படுகிறீர்களா? அதற்கு ஒரு வழி இங்குண்டு. இங்கே குறிப்பிடப்படும் புதினங்களை வரிசைக்கிரமமாக படித்தாலே போதும், தமிழர்களின் சரித்திரத்தை அழகாக தெரிந்துக்கொள்ளலாம். கல்கியின் படைப்புக்களைத் தொடர்ந்து அகிலன் கல்கியின்
மிச்சமீதிக் கதையினை அவருக்குரிய பாணியில் சிறப்பாக படைத்துக் கொடுத்திருக்கிறார்.
இதோ நீங்கள் வரிசைக்கிரமமாக படிக்கவேண்டிய புதினங்கள் :

1.பார்த்திபன் கனவு (கல்கி)
2.சிவகாமியின் சபதம் (கல்கி)
3.பொன்னியின் செல்வன் (கல்கி)
4.வேங்கையின் மைந்தன் (அகிலன்)

தற்போது உள்ள மென்புத்தகங்களில் எனக்கு கிடைத்தவற்றை இங்கே கொடுத்துள்ளேன். மற்ற புதினங்களை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP