பாட்டொன்று கேட்டேன்.....

>> Wednesday, October 24, 2007

நாம் இன்பமாக இருக்கும்பொழுது கண்ணுக்குத் தெரியாத ஆண்டவன், கஷ்டம் என்று ஒரு மாயைத்திரை நம்மை மறைக்கும்பொழுது அத்திரையில் இறைவனின் அன்புத் திருவுருவம் தெரிவதேன்?

இன்பத்தில் திளைத்திருக்கும் மனிதன் தன்னையே மறந்திருக்கும்பொழுது கடவுளை மட்டும் ஞாபகம் வைத்திருக்க முடியுமா என்ன... மனிதன் பலசமயங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைகளோடு எப்படியெல்லாம் உறவாடுகிறான் என்பதனைப் பார்க்கும்பொழுது, இந்த மனிதக்குலம் உலகில் இன்றும் நிலைத்திருக்கும் இரகசியம் வெளிச்சம்போட்டுக் காட்டப்படுகிறது.

சந்தர்ப்பங்களை தன் வசப்படுத்தும் கலையினைக் கற்றவன் மனிதன். அதற்காக அவன் தியாகம் செய்தது நிம்மதி, தூக்கம் இன்னும் பலப் பல.

மனிதன் தூங்குகிறானோ இல்லையோ, இதோ நம்முள் தூங்கிக்கொண்டிருக்கும் ஒரே விஷயம் நம்முடைய வாழ்க்கைத் தொடர்பான தேடல்கள்தான். இந்தப் பாடல்கள் சில சமயம் என்னைத் தட்டி எழுப்பி இருக்கின்றன. நீங்களும் கேளுங்களேன், நீங்கள் ஏற்கனவே கேட்டப் பாடல்கள்தான்.

Powered by eSnips.com

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP