வெண்மை - விடிவுக்காலம் ஒரு கேள்விக்குறி?

>> Thursday, October 25, 2007

தோட்டப்புரங்களில் வாழும் பல தமிழர்கள் இன்றளவிலும் அனுபவிக்கும் பல இன்னல்களை நினைத்தால் மனம் விம்முகிறது. அதிலும் ஒரு தோட்டப்புரப் பெண் முதலாளித்துவத்தின் பிடியில் சிக்கிச் சின்னாப் பின்னமாகி போவதை இயல்பாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறது "வெண்மை" எனும் குறும்படம். முதலாளிகளிடம் கற்பைப் பறிகொடுக்கும் லட்சுமியின் உணர்வுகளைப் புரிந்து அவளுக்கு வாழ்வளிக்க முனையும் ஒரு இளைஞனின் குணம் நமக்கொரு நல்ல படிப்பினையை வழங்குகின்றது.

இன்னும் ஆங்காங்கே இந்த லட்சுமியைப் போன்று எத்தனை சகோதரிகள் இருட்டில் வாழ்கிறார்களோ...?

விடியலை நோக்கிப் புலம் பெயர்ந்த தமிழர் தோட்டத் தொழிலாளிகளுக்கு என்றுதான் விடிவுக்காலமோ?

சமூக விழிப்புணர்வு ஊட்டக்கூடிய இக்குறும்படத்தைத் தயாரித்த மலேசிய இந்தியர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். உங்களுடைய பணி தொடரட்டும்...

இதோ லட்சுமியின் கதை....

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP