4-ஆம் திகதி பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு..!
>> Tuesday, September 30, 2008
அரி ராயா பெருநாளன்று கெப்பாலா பாத்தாசில் அமைந்துள்ள பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பிற்குச் செல்வதற்கு இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் தயாராக இருந்த சமயம், திகதி திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரி ராயாவின் முதல் நாளன்று புத்ரா உலக வாணிப மையத்தில் நண்பகல் மணி 12.30 தொடங்கி மாலை 4.30 மணிவரை பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு நடைப்பெறவுள்ளது. அன்றைய தினத்தில் தென் மாநிலங்களில் வசிக்கும் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள், அங்குச் சென்று பிரதமரிடம் அரி ராயா வாழ்த்துகள் கூறி இண்ட்ராஃப் தலைவர்களுக்கு முறையான நீதி வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதனை அடுத்து அக்டோபர் 4-ஆம் திகதியன்று பிரதமர் கெப்பாலா பாத்தாசில் அமைந்துள்ள மில்லேனியம் மண்டபத்தில் காலை 11.00 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளார். இத்திறந்த இல்ல உபசரிப்பிற்கு வட மாநிலங்களிலிருந்தும், கிழக்குக்கரை மாநிலங்களிலிருந்தும் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் படைத்திரள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்விறு நிகழ்வுகளிலும் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் ஆரஞ்சு நிற உடையினை அணிந்துச் செல்வதோடு, அமைதியான முறையில் கலந்துக் கொண்டு வாழ்த்துகளையும் மனுவையும் சமர்ப்பித்துவிட்டு வருமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவ்விரு நிகழ்வுகளிலும் ஆரஞ்சு நிற அலை பளிச்சென்று தெரிய வேண்டும்..
மறவாமல் கலந்துக் கொண்டு ஒரு கலக்கு கலக்கிருங்க...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment