கவிதைகள் வரவேற்கப்படுகின்றன..

>> Wednesday, September 3, 2008

வாசகர்களுக்கு வணக்கம்,

இண்ட்ராஃப் மக்கள் சக்தி கூடிய விரைவில், மலேசிய இந்தியர்களின் உரிமைப் போராட்டங்களைச் சித்தரிக்கும் கவிதை நூலொன்றை வெளியிடவுள்ளது. எனவே வாசகர்களிடமிருந்து கவிதைகள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. தரமான கவிதைகள், ஆழமான கருத்துகள் கொண்ட கவிதைகள், தேர்ந்தெடுக்கப்பட்டு நூலில் பிரசுரிக்கப்படும்.

வாசகர்களின் படைப்புகள் மரபுக் கவிதையாகவோ, உரைவீச்சாகவோ, 'ஹைக்கூ'வடிவிலோ இருக்கலாம். முடிந்த மட்டும் கவிதைகள் சுருக்கமாகவும் அல்லாமல் நீளமாகவும் அல்லாமல் ஒருபக்கத் தாளில் இடம்பெறும்படி அமைந்திடுதல் நல்லது. வாசகர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட படைப்புகளை அனுப்பலாம்.

கவிதைகளை கொடுக்கப்பட்ட மின்மடல் முகவரிக்கு 20-ஆம் திகதி செப்டம்பர் மாதத்திற்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் : olaichuvadi@gmail.com

நம் உரிமைப் போராட்டங்களை நினைவுக் கூறவிருக்கும் இக்கவிதை நூலுக்கு உங்களுடைய பங்கு மிக முக்கியம். எனவே, இன்றே கவிதை எழுதத் தொடங்குங்கள்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP