சுதந்திரச் சதுக்கத்தில் விடுதலை கோரிக்கை..

>> Wednesday, September 24, 2008



இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் மெழுகுவர்த்தி ஏந்தியப் பேரணி

இடம் : 'மெர்டேக்கா' சதுக்கம்

திகதி : 27 செப்தெம்பர் 2008 (சனிக்கிழமை)

நேரம் : இரவு மணி 7.00

பி.கு: அனைவரும்,மெழுகுவர்த்தியையும் இண்ட்ராஃபின் சிறியக் கொடியையும் உடன் கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இண்ட்ராஃப் மக்கள் சக்தி மீண்டும் ஒரு பேரணிக்கு தயாராகி விட்டது. கடந்த ஒன்பது மாதங்களாக கமுந்திங் தடுப்புக் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இண்ட்ராஃப் தலைவர்களின் விடுதலைக்காக அரசாங்கத்திடம் பலவகையில் வேண்டுகோள் விடுத்திருந்தும், அனைத்தும் விழலுக்கு இழைத்த நீராய் பயனற்றுப் போனது.

அதே சமயம், சுயலாபத்திற்காகவும் அரசியல் நோக்கத்திற்காகவும் இண்ட்ராஃப் தலைவர்களின் விடுதலை குறித்து அண்மையில் பல தரப்பினர் பேசிக் கொண்டு வருவதையும், அரசாங்கம் அவர்களுக்கு செவிசாய்ப்பதுபோல் பாசாங்கு காட்டுவதையும் கண்டு நாம் ஏமார்ந்துவிடக் கூடாது. அவர்கள் நினைத்தால் ஆதரிப்பார்கள், அவசியம் இல்லாத பட்சத்தில் தூக்கி எறிந்து விடுவார்கள்.

'மக்கள் சக்தி' என்று வரும்பொழுது மக்கள்தான் களத்தில் இறங்கி தங்களின் இழந்த உரிமைகளை மீட்க வேண்டும். எனவே, நாம் அரசாங்கத்திற்கு மீண்டும் ஒரு பாடத்தை கற்பிக்க வேண்டும்!

எதிர்வரும் 27 செப்தெம்பர் மாதம் மறவாமல் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் அனைவரும் மெர்டேக்கா சதுக்கத்தில் அமைதியான முறையில் ஒன்று கூடுவோம். இண்ட்ராஃப் தலைவர்கள், ராசா பெத்ரா மற்றும் பிற இசா கைதிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி அரசாங்கத்தை வலியுறுத்துவோம், வாரீர்...

இப்பேரணியில் கலந்துக் கொள்ளவிரும்புபவர்கள் அவரர் மாநில ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்புக் கொண்டு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். மறவாமல் ஆரஞ்சு நிற உடை அணிந்துக் கொண்டு, மெழுகுவர்த்தியையும் இண்ட்ராஃப் சிறு கொடியையும் உடன்கொண்டு வாருங்கள். சாலை விதிமுறைகளை மீறாமல் கண்ணியமாக நடந்துக் கொள்ளும்படி ஆதரவாளர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP