பினாங்கு மக்கள் சக்தி பந்தல் களைக்கட்டிவிட்டது!

>> Saturday, February 7, 2009

காலை மணி 9 தொடங்கி பினாங்குத் தீவு மக்கள் சக்தியின் சமூக சேவைப் பந்தல் இயங்க ஆரம்பித்து விட்டது. மக்கள் சக்தி சமூக சேவைப் பந்தலை திரு.நரகன் அவர்கள் குத்து விளக்கேற்றி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். தண்ணீர்மலையில் மக்கள் கூட்டம் பெருகிவரும் இவ்வேளையில்,மக்கள் சக்தி பந்தலுக்கான வரவேற்பும் அமோகமாக இருக்கிறது. பொதுமக்கள் பல பிரச்சனைகளுடன் மக்கள் சக்தி பந்தலை நாடுகின்றனர். பந்தலில் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் தேர்தல் வாக்காளர் பதிவினை மும்முரமாக செய்து வருகின்றனர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிகழ்வுகளின் படக்காட்சிகளை பதிவேற்றுகிறேன்.



Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

கிருஷ்ணா February 7, 2009 at 10:31 PM  

தமிழனின்
தன்மானத்தின் வயது
ஓராண்டுதானாம்!

மீண்டும்
இன்று
பத்துமலையில்
மக்கள் வெள்ளம்
நிரம்பி வழிகிறதாம்..

நெஞ்சு பொறுக்குதில்லையே..
இந்த நிலை கெட்ட மனிதரை
நினைத்துவிட்டால்...!

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP