ஜாசின் மலாக்காவில் உண்ணாநோன்புப் போராட்டம்...

>> Monday, January 28, 2008

நேற்று ஜாசின், மலாக்காவில் அமைந்திருக்கும் சிறீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர்களுக்கு ஆதரவாக 30 பேர்கள் கொண்ட குழுவொன்று 5 நாட்கள் உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.

இவ்வுண்ணாநோன்புப் போராட்டத்தில் ஜாசின் மற்றும் தங்காக் பட்டிணத்திலிருந்து ஆதரவாளர்கள் வந்துக் கலந்துக் கொண்டுள்ளார்கள். உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகியிருக்கும் 5 மகா தலைவர்களை அரசாங்கம் எந்த ஒரு நிபந்தனையுமின்றி விடுவிக்க கோரும் கருப்பொருளைக் கொண்டு இவ்வுண்ணாநோன்புப் போராட்டம் நடத்தப்படுவதாக, இப்போராட்டத்தின் ஏற்பாட்டாளர் கூறினார்.

இதோ, ஜாசின் மகா மாரியம்மன் ஆலயத்தில் தொடங்கிய உண்ணாநோன்புப் போராட்ட படக்காட்சி. இவ்வுண்ணாநோன்புப் போராட்டத்தில் உள்ளவர்களை பேட்டி எடுத்து பதிவு செய்து ஓலைச்சுவடிக்கு அனுப்பியவர், மலாக்காவைச் சேர்ந்த சகோதரர் திரு.கலையரசு. இவ்வேளையில் அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

படக்காட்சி



இவரைப்போல் ஓலைச்சுவடிக்கு அண்மைய நிகழ்வுகளை பற்றிய தகவல்களைப் பரிமாற வாசகர்கள் அழைக்கப்படுகின்றனர்... தகவல்களைப் பரிமாறிக் கொள்ள நினைப்பவர்கள் என்னை மின்னஞ்சல் வழி தொடர்புக் கொள்ளலாம்...

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP