16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் ஐந்து)

>> Saturday, February 23, 2008

தூரத்திலிருந்தே ஒரு காவல்துறை அதிகாரி எங்கள் பேருந்தை நோக்கிக் கைக்காட்டி பிற அதிகாரிகளிடம் ஏதோ கூறுவது எங்களுக்கு தென்பட்டது.

"போச்சிடா..பாத்துட்டானுங்க..! கண்டிப்பா நிப்பாட்டுவானுங்க.." இப்படி ஒருவர் கூற, இன்னொருவர்..

"கை காட்டுறான்..கை காட்டுறான்.. நிக்கச் சொல்றான்..!"

பேருந்தை ஓரங்கட்ட கையசைக்கப்பட்டது. பேருந்தும் சாலையோரத்தில் ஓரங்கட்டி நின்றது.

" பெகி மானா..!?

பேருந்து ஓட்டுநர் பதிலளித்தார்..

" பெகி கோயில், செம்பாயாங்..."

காவல்துறையினர் பேருந்தை சற்று நேரம் நோட்டமிட்டனர்.

" புகா பிந்து..! "

பேருந்து கதவு திறக்கப்பட்டது. ஒரு காவல்துறை அதிகாரி பேருந்தினுள் நுழைந்து நோட்டமிட்டார். பேருந்தில் உள்ளோர் அனைவரும் அமைதியாக இருந்தனர். அவர் கீழே இறங்கியதும் பேருந்தில் உள்ள ஒருவர்,

"எல்லாரும் இறங்க வேணாம், ரெண்டு பேரு போய் பேசுனா போதும்.."



ஓட்டுநர் பேருந்தை விட்டு இறங்கினார். அவரைத் தொடர்ந்து இரண்டு பேர்கள் பேருந்தைவிட்டு இறங்கினர். ஜன்னல் ஓரத்திலிருந்து நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கீழிறங்கியவர்களின் அடையாள அட்டை வாங்கப்பட்டு பரிசோதனைக்குள்ளானது.

உடனே நான் என் நிழற்படக்கருவியை கையில் எடுத்துக் கொண்டேன். காவல் துறையினர் அடிக்கடி பேருந்தில் உள்ளவர்களை வெளியிலிருந்து கண்ணோட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்கள் என் பக்கம் பார்க்காதபோது ஜன்னல் வழி சில படங்களை பதிவு செய்ய முடிந்தது. எனக்கு உதவியாக வேலன்,

"இங்கே பாருங்க, இதெ எடுங்க.. அவன் பாக்கல..ஓகே..ஓகே.. தோ இதையும் எடுங்க..கைல M-16 வெச்சுறுக்கான்..அத கிளியரா எடுங்க.. மெகசின் லோட் பண்றான் பாருங்க.. புடிச்சி போட்டுருவோம்"

என் பின்னால் இருந்த ஒரு பெரியவர்,

"இதுக்குலாம் எதுக்கு பயந்துகிட்டு, நேரா அவன் பாக்கும்போதெ எடுங்க.. கொஞ்சம் இப்படி வந்து எடுங்க..இங்க நல்லா தெரியிது.."



சில நிமிடங்கள் கழிந்தது..

நானும் சிலரும் பேருந்தைவிட்டு இறங்கிவிட்டோம்.. சிலர் காவல் துறையினரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அருகில் சென்று என்ன பேசுகிறார்கள் என்பதனை கவனித்தேன்..

"லூ அடா அபா அபா புக்திகா?"

"பெகி செம்பாயாங் மாவ் அபா புக்தி?"

"யூ கெனா துஞ்சோக் புக்தி பெகி செம்பாயாங்.."

"ஓகே லா இன்சேக், கலாவ் இன்சேக் தாக் பெர்சாயா சமா காமி, இன்சேக் ஈக்குட் கிதா.."

"இனி காமி டா தேங்கொக் பாஞாக் பஸ் டரி செமலாம்..காமி தாவ்"

"தாக்டா இன்சேக், காமி டா பாயார் செரீபு கத் தோக்கோங் து, உந்தோக் செம்பாயாங்"



பேசிப் பார்த்ததில் காவல் துறையினர் மசிவதாகத் தெரியவில்லை.. எங்களை விட்டுவிட்டு இன்னொரு பேருந்தை அவர்கள் நிறுத்தச் சென்றுவிட்டார்கள். அப்பேருந்தில் இந்தியர்கள் ஒரு திருமணத்திற்குச் செல்வதுப் போல் காணப்பட்டார்கள். 5 நிமிடங்கள் கழித்து அப்பேருந்து தன் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டது.

மீண்டும் ஒரு காவல் அதிகாரி எங்களை நோக்கி வந்தார்.

"லூ ஓராங் அடா பாவா புடாக் கெசிக் கா?"

"தாக்டா இன்சேக்"

"ஓகே, செமுவா டெங்ஙார் சினி, செகாராங் காமி மாவ் யூ ஓராங் டுடோக் டி டாலாம் பஸ்"

அப்பொழுது எங்களுடன் வந்திருந்த ஒருவர்,

"இன்சேக் சாயா பூஞா ஐ.சி? "

"கெனாப்பா?"

"தாடி இன்சேக் அம்பேல் சயா புஞா ஐ.சி.."

" ஜாடி...?"

"சாயா மாவ் ஐ.சி சாயா.."

" கெனாப்பா சாயா பெர்லூ பாகி ஐ.சி டெகாத் யூ? "

"இதூ ஐ.சி சாயா, சோ, சாயா மாவ் ஐ.சி சாயா பாலேக்! இன்சேக் தாக் போலேக் அம்பேல் ஐ.சி சாயா!"

"சியாபா காத்தா தாக் போலே? ஆ.....! பாவா யூ பூஞா லோயர்..! சியாபா காத்தா தாக் போலே? யூ தாவ், காமி அடா உண்டாங் உண்டாங்.. காமி போலே அம்பேல் ஐ.சி காமு..!"

"மானா போலே இன்சேக்?!"

"ஆ... செகாராங் ஜங்கான் புவாட் மசாலா, பெகி டுடோக் டலாம் பஸ், லெபஸ் து இகூட் கிதா பூஞா கெரேத்தா..ஓகே? ஜாங்கான் பக்சா காமி! கலாவ் யூ தாக் பெகெர்ஜசாமா, யூ யாங் அகான் சுசா.. ! ஜாங்கான் நந்தி கமி தகான் யூ சுமுவா, பாகாம்?! பிகி டுடோக்!"

எங்களில் ஒருவர்,

"சிகரெட் இருந்தா யாராச்சும் கொடுங்க.. தாஜா பண்ணி பாப்போம்.."

ஒரு காவல் துறை அதிகாரிக்கு சிகரெட் கொடுக்கப்பட்டது.. புகையை நன்றாக இழுத்துக் கொண்டே அந்த அதிகாரி ஒரு சிலரின் சமரசப் பேச்சுகளில் தன்னை சற்று நேரம் ஐக்கியப்படுத்திக் கொண்டார். இறுதியாக 'முடியாது' என்ற வார்த்தையைத் தவிர அவரிடமிருந்து வேறு பதில் வராது அனைவரும் ஏமாந்து போயினர். சிகரெட் கொடுத்திருக்கவே தேவை இல்லை...



இறுதியாக, கையில் M-16 இரக துப்பாக்கியேந்தி எங்களை வலுக்கட்டாயமாக மிரட்டி பேருந்தில் அமர வைத்தனர் காவல் துறையினர். அதன்பின் ஒரு காவல்துறை அதிகாரி பேருந்தில் ஏறி,

"ஆ...செகாராங் செமுவா அம்பேல் கெலுவார் ஐ.சி.."

என்று கட்டளையிட்டுவிட்டு அனைவருடைய அடையாள அட்டைகளையும் பறிமுதல் செய்தார். காவல் அதிகாரி ஒவ்வொரு இருக்கையாகச் சென்று அடையாள அட்டைகளை வாங்கிக் கொண்டே இருக்கைகளை கண்ணோட்டமிட்டுக் கொண்டு வந்தார். என் இருக்கையில் நான் மறந்துப்போய் முகமூடியை வைத்திருந்தேன். அதைக் கண்டுவிட்ட ஒருவர் எனக்கு ஞாபகப்படுத்தினார்,உடனே அதைக் காவல் அதிகாரி பார்ப்பதற்குள் எடுத்து ஒளிவைத்தேன். அதன்பின் அந்த காவல்துறை அதிகாரி எல்லா அடையாள அட்டைகளையும் சரிபார்த்துவிட்டு பேருந்து ஓட்டுநரிடம்..

"ஓகே, யூ ஈக்குட் காமி செகாராங்.. ஈக்குட் கெரேத்தா டேப்பான்..!"

என்று கட்டளையிட்டு இறங்கிச் சென்றார்.



முன்னே ஒரு காவல் துறையின் ரோந்துக் கார் செல்ல, எங்கள் பேருந்து அக்காரைப் பின் தொடர்ந்தது. நிச்சயம் எங்களைப் புலாபோலுக்குத்தான் அழைத்துச் செல்கிறார்கள் என்று மனதில் தோன்றியது. எனவே, நண்பர் கலையரசுவை கைப்பேசியின் மூலம் தொடர்புக் கொள்ள முயற்சித்தேன். ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை.

இருபது நிமிட பயணத்திற்குப் பிறகு நாங்கள் ஜாலான் செமாராக்கில் அமைந்துள்ள காவல் துறைப் பயிற்சி மையமான புலாபோல் PULAPOL (Pusat Latihan Polis, Jalan Semarak Kuala Lumpur )அடைந்தோம்.



புலாபோல் வளாகத்தில் நுழைந்த பேருந்து, ரோந்து வாகனத்தைப் பின்பற்றிச் சென்றது. வழிநெடுக காவல் துறையினர் நின்றுக் கொண்டிருந்தார்கள். இறுதியாக எங்களுக்கு சைகை காட்டப்பட்டு ஒரு வாகனம் நிறுத்துமிடத்தில் பேருந்து நின்றது. அவ்விடத்தில் மக்கள் கூட்டம் திரண்டு நிற்பதைக் காண முடிந்தது. அவ்வேளை எனக்கு நண்பர் கலையரசுவிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்தது.

" சதீஷ், எங்க இருக்கீங்க..?"

"தோ, உங்க முன்னுக்கு ஒரு பஸ் வந்து நின்னுச்சில..அதுலதான் இருக்கேன்.." என்று சிரித்துக் கொண்டே கூறினேன்..

நண்பர் கலையரசுவும் என் பதிலைக் கேட்டு..

" ஹா..ஹா..ஹா.. வாங்க..வாங்க.. வேல்கம்.." என சிரித்துக் கொண்டே வரவேற்றார்.

நாங்கள் அனைவரும் பேருந்தைவிட்டு இறங்குவதற்கு முன் சிலர் அறிவிப்புச் செய்து கொண்டிருந்தார்கள்.

"யாராச்சும் பேன்னர், மக்கள் சக்தி டீ- சேர்ட் இருந்துச்சுனா கொண்டு வராதீங்க, பஸ்லியே எங்கையாச்சும் ஒளி வெச்சுருங்க..கடைசிவரக்கும் நாம்ம கோட்டுமலைக்குதான் போறோன்னு சொல்லிருங்க..ஓகேவா"

அனைவரும் வெறுங்கையோடு இறங்கினோம்.. பேருந்தைவிட்டு இறங்கியதும் "மக்கள் சக்தி வாழ்க..!" என்ற கோஷங்கள் பரவலாகக் கேட்டன..

எங்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது...

" ஹா..ஹா..ஹா..நம்ம கைங்களே நம்மல காட்டி கொடுத்துருச்சீங்களே..."

இனியும் காவல் துறையை ஏமாற்ற முடியாது என்று சிரித்துக் கொண்டே அனைவருக்கும் கையசைத்தோம்.. நாங்களும் மக்கள் சக்தியில் இணைந்தோம்..

கூட்டத்தில் நண்பர் கலையரசுவின் முகம் தெரிந்தது.. தூரத்திலிருந்து கையசைத்தார்.. நானும் பதிலுக்கு கையசைத்தேன்..

பிறகு நாங்கள் அனைவரும் தனிக் குழுவாக ஒரு மண்டபத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு வெளியே நிற்கவைக்கப்பட்டோம்..

போராட்டம் ஆரம்பமாகும்...

அத்தியாயம் ஐந்து முற்றும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

5 கருத்து ஓலை(கள்):

Anonymous February 23, 2008 at 7:52 PM  

kavalaiyaaga irunthaalum migavum suvaarassiya maagave todargreergal

Sathis Kumar February 23, 2008 at 8:45 PM  

ஆமாம் உஷா, கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாலும் எங்களுக்கு அந்நிகழ்வு ஒரு திருவிழா அனுபவம் போல் இருந்தது.. தமிழன் கவலை, பயம் அறியாமல் இருந்ததைப் பார்க்க முடிந்தது...

Anonymous February 23, 2008 at 9:04 PM  

ethu vanthaalum ethirka thuninthu vittathu nam samuthayam....vetri namakku nitchayam...thodarnthu poraduvom....kavalaiyai vidunggal..kanneerai thudaiyunggal...valarga nam samuthyam...

தமிழ் பெயரில்லா தமிழன்(SATEES) February 24, 2008 at 5:10 AM  

nanba,arasaanggathil irukkum ninggel ithaiyellam thandi varuvathuthaan perumai!!!
Makkal Sakthi,athu magatthana sakthi!!
nanbare,nalle velai ningge law points ellam police kitte pesale,illaatti,ninggelum engge kude Pudu Jail le 3 days irunthiruppingge!! :)

Anonymous February 24, 2008 at 11:33 AM  

satees sir,URIMAIPORUKKU eppadi selvathu?

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP