சன்னாசி மலை ஆண்டவர் மற்றும் சிங்க முக காளியம்மன் ஆலய மாசி மகம்..

>> Saturday, February 23, 2008

மலாக்காவில் கடந்த 21-ஆம் திகதியன்று சன்னாசி மலை ஆண்டவர் ஆலயத்தில் மாசி மகத் திருவிழா மிக விமரிசையாக நடைப்பெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் இவ்விழாவில் கலந்துக் கொண்டு சன்னாசி ஆண்டவரின் அருளையும் ஆசியையும் பெற்றனர். இவ்விழாவில் மக்கள் சக்தி தன்னுடைய பந்தலை அமைக்கத் தவறவில்லை. மலாக்கா மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் ஐயா திரு.கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் மக்கள் சக்தி இயக்கப்பட்டு பொதுமக்களுக்கு கையேடுகளை விநியோகிக்கப்பட்டது.

சன்னாசி மலை ஆண்டவர் மாசி மகத் திருவிழா தொடர்பான படக்காட்சிகளை மலாக்கா ஓலைச்சுவடியின் நிருபர் திரு.கலையரசு அனுப்பியிருந்தார். அப்படக்காட்சிகள் சில கீழே...







மக்கள் சக்தி பந்தல்



குடும்பத்தைத் தாங்கும் சுமைதாங்கிகள்...



இதற்கிடையில் பினாங்கு தெலுக் பாகாங்கில் அமைந்துள்ள சிங்க முக காளியம்மன் ஆலயத்தில் வருடாந்திரமாக நடைப்பெறும் மாசி மக தெப்பத் திருவிழா மிக விமரிசையாக நடைப்பெற்றது. இருப்பினும், இவ்விழாவில் முக்கிய நிகழ்வான தெப்பம் விடுதல் இம்முறை நடைப்பெறவில்லை. சுமத்ராவில் ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவாக தெலுக் பகாங் கடற்கரையில் அலைகள் உயர்ந்து காணப்பட்டதாலும், காற்று பலமாக வீசியதாலும் தெப்பங்களைக் கடலில் விட மிகச் சிரமமாக இருந்தது. பக்தர்கள் தங்கள் தெப்பங்களை கடலில் விடும்பொழுது மறுகணம் அத்தெப்பங்கள் உடைந்து சுக்கு நூறாகிய காட்சிகள் மிகவும் வேதனையாக இருந்தன. ஒரு சிலர் தங்களுடைய தெப்பங்களை கடற்கரை மணலில் புதைத்து வைத்தனர். ஒரு சிலர் அங்கு மணல் மேடுகள் செய்து மகிழ்ந்திருந்தனர். இப்படியாக அன்றைய தெப்பத் திருவிழா ஒரு நிறைவைக் கண்டது.

தெப்பத் திருவிழாத் தொடர்பான சில படக்காட்சிகள் கீழே...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP