ஐந்து தலைவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது

>> Tuesday, February 26, 2008

உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் (ISA) கீழ் கைது செய்யப்பட்டு, கமுண்டிங்கில் வைக்கப்பட்டிருக்கும் ஐந்து இண்டிராப் தலைவர்கள் தங்களை விடுவிக்குமாறு செய்து கொண்ட மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று காலையில் நிராகரித்தது

மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஜைனால் அஸ்மான் அப்துல் அஜிஸ் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் விடுத்த தடுப்புக்காவல் ஆணை செல்லத்தக்கது என்றும் அந்த ஆணை உள்நாட்டு பாதுகாப்பு சட்ட வரம்புகளுக்கு உட்பட்டதே என்றும் தனது தீர்ப்பில் கூறினார்.

பி.உதயகுமார், எம். மனோகரன், டி. வசந்தகுமார், வி. கணபதி ராவ் மற்றும் ஆர். கெங்காதரன் ஆகிய ஐவரே டிசம்பர் 13ஆம் நாள் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களாவர்.

இந்த ஐவரும் தாங்கள் தடுப்புகாவலில் வைக்கப்பட்டிருப்பது சட்ட விரோதமானது என்று தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மேலும் தாங்கள் கைது செய்யப்படுவதற்கு கொடுக்கப்பட்ட காரணங்கள் தெளிவாக இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

மனுதாரர்களும் அரசு தரப்பினரும் தாக்கல் செய்திருந்த எழுத்துப் பூர்வமான சாட்சியங்களை தான் கவனத்தில் கொண்டதாக நீதிபதி கூறினார். ஆனால், அச்சாட்சியங்கள் எதுவும் பின்பற்ற வேண்டிய சட்டவிதிகள் மீறப்பட்டிருக்கின்றன என்று காட்டவில்லை என்று கூறினார்.

இண்ராப் ஆதரவாளர்கள்

இந்த வழக்கில் நீதிபதியின் தீர்ப்பை கேட்பதற்கு நீதிமன்றத்தில் ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். மனுதாரர்களின் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.

தீர்ப்பினால் ஏமாற்றமடைந்த சுமார் 300 இண்ராப் ஆதரவாளர்கள் நீதிமன்றத்திற்கு வெளியில் நின்று “வாழ்க இண்ராப்”, “ வாழ்க மக்கள் சக்தி “ என்று கோஷமிட்டனர்.

இந்த ஐந்து தடுப்புகாவல் கைதிகளின் வழக்கறிஞர்களான கர்பால் சிங் மற்றும் கோபிந்த் சிங் டியோ பெடால் நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யப்போவதாக அங்கு குழுமியிருந்தவர்களிடம் கூறினார்கள்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கின்றோம், ஆனால் அந்த தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கவில்லை; ஆகவே நீதி கிடைக்கும் வரையில் போராடப்போவதாக சூளுரைத்தார் வழக்கறிஞர் கோபிந்த் சிங்.

நன்றி : மலேசியா இன்று

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

Anonymous February 26, 2008 at 10:29 PM  

KADAVUL SEEKIRAME KAN THIRAPAAR...APPOTHU YAAR KUTRAVAALI YENDRU ULAGA KANGAL NERIL KAANUM..NAM THALAIVARGAL SEEKIRAME VELIYE VARUVAARGAL...VETRI NAMAKKE...VETRI NITCHAYAM...NAM MUYARCHIGAL VEEN POGAATHU

Anonymous February 27, 2008 at 4:41 PM  

Valga Pallandu En Talaivargal.Valadum En Tamil Inam.Poraduvom, Poraduvom.....

Valga Makkal Sakhti.....

Aanda Parambarai.....
Meendum Aala Ninaiphatil Enna Kurai...

Tamizhan....

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP