5 வயதுக் குழந்தையின் வேண்டுகோள்...

>> Thursday, February 7, 2008

இந்து உரிமைப் பணிப்படையின் தலைவரான திரு.வேதமூர்த்தியின் மகள் வைஷ்ணவி (வயது 5) தன் சொந்த கைவண்ணத்தில் உருவான அழைப்பிதழை, நேற்று சுஹாகாம் எனப்படும் மனித உரிமை ஆணையத்திடம் சென்று வழங்கியுள்ளார். வருகின்ற 16-ஆம் திகதி பிப்ரவரியன்று நாடாளுமன்றத்திற்கு முன் பிரதமருக்கு ரோஜாப் பூக்களை வழங்கும் நிகழ்வில் சுஹாகாம் தலைவர் அபு தாலிப் ஒத்மான் கலந்துக்கொள்ள வேண்டுமென்று அவ்வழைப்பிதழின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன் படக்காட்சிக் கீழே :

மலேசியாக்கினி படச்சுருள்





இந்நிகழ்வில் 30 பேர்க் கொண்ட குழு ஒரு மகஜரை சுஹாகாமிடம் ஒப்படைத்தது. அம்மகஜரில் சுகாம் மனித உரிமைத் தொடர்பான விஷயங்களில் அதிகம் ஈடுபாடு காட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.. அதோடு 16-ஆம் திகதி பிப்ரவரியன்று நாடாளுமன்றத்தின் முன் நடைப்பெறவிருக்கும் நிகழ்விற்கு சுஹாகாம் பார்வையாள்ராக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இச்சந்திப்புக் கூட்டத்தில் இந்து உரிமைப் பணிப்படையின் தற்காலிகத் தலைவர் திரு.தனேந்திரன், மற்றும் வழக்கறிஞர் திரு.சுரேந்திரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்...

நல்ல முடிவை எதிப்பாப்போம்..

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP