வலைப்பதிவர் ராஜா பெட்ராவிற்கு கைது ஆணை..!!!

>> Wednesday, July 16, 2008


பிரபல வலைப்பதிவரான ராஜா பெட்ராவிற்கு அவதூறு பரப்பியக் குற்றத்திற்காக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அல்தான்துயா கொலைவழக்கில் மலேசியத் துணைப்பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சூருக்கு தொடர்பு இருப்பதாக தம்முடைய சத்திய பிரமாணத்தில் அறிவித்திருந்ததையடுத்து இன்று அவருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராஜா பெட்ராவின் மனைவி மரினா லீ அப்துல்லா நிருபர்களிடம், இன்று காலையில் தாம் கைது ஆணையை தமது வழக்கறிஞரின் மூலம் பெற்றதாகவும், நாளைக் காலை 10 மணியளவில் கோலாலம்பூர் காவல்த்துறை தலைமையகத்தில் ராஜா பெட்ரா சரணடைய கட்டளையிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ராஜா பெட்ரா தமது சத்திய பிரமாணத்தில் கொலனல் அசீஸ் பூயோங் (வெடிமருந்து நிபுணர்), அசீசின் மனைவி நூர் அயாத்தி ரோஸ்மா மன்சூருக்கு உதவியாளர்களாக இருந்ததாக தெரிவித்திருந்தார்.

அல்தான்துயா கொலைத் தொடர்பாக பிரதமர் அப்துல்லாவிடம் இராணுவ உளவுத்துறை எழுத்துப்பூர்வமாக ஒரு முழுமையான அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும், அதனை தனது மருமகனான கைரி ஜமாலூதினிடம் அப்துல்லா கொடுத்து பத்திரப்படுத்தி வைக்கச் சொல்லி இருப்பதாகவும், ராஜா பெட்ரா தமது சத்திய பிரமாணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாளை ராஜா பெட்ரா காலை 10 மணிக்கு சரணடைவாரா? இல்லை கொடுத்த காலக்கெடு முடிவதற்குள் காவல்த் துறையினர் அவரை கைது செய்வார்களா?

அரசியல் நாடகத்தைப் பொறுத்திருந்து பார்ப்போம்..

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP