கோலாலம்பூர் காவத்துறை தலைமையகத்தில் மக்கள் கூட்டம் திரள்கிறது..!!

>> Wednesday, July 16, 2008

அங் துவா சாலையில் அமைந்திருக்கும் கோலாலம்பூர் காவல்த்துறை தலைமையகக் கட்டிடம் வெளியே தற்சமயம் சுமார் 250 அனுவார் ஆதரவாளர்கள் பதாகைகளை ஏந்திய வண்ணம் "ரீஃபோர்மாசி" என்று முழக்கமிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஏந்தியுள்ள பதாகைகளில் "அனுவார் கைதை எதிர்ப்போம்" என்று எழுதப்பட்டுள்ளது. ஆதரவாளர்கள் கூட்டம் மேலும் பெருகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கட்டிடத்தின் வெளியே வெளிநாட்டு நிருபர்கள் பலர் செய்தி திரட்டுவதற்கு காத்துக் கொண்டிருப்பதாகவும், அனுவாரின் கைது தொடர்பான செய்திகள் பல முக்கிய வெளிநாட்டு ஊடகங்களில் வெளிவந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

அனுவாரின் அரசியல் பிரவேசத்தைத் தடுப்பதற்கான, பாரிசானின் சதித்திட்டம் இது என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா கூறினார். ஓரிணப்புணர்ச்சி என அனுவார் மீது அடிப்படையற்ற குற்றஞ்சாட்டி அரைத்த மாவையே அரைக்கப்பார்க்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் சிலரை மேலும் கைது செய்வதற்கு திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்பதால், கட்டிடத்தின் வெளியே திரளும் ஆதரவாளர்கள் கூட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் தாங்கள் வைத்திருப்பதாக தியான் சுவா கூறினார்.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP