அனுவார் இபுராகிம் பெர்மாத்தாங் பாவோ நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

>> Thursday, July 31, 2008


அனுவார் இபுராகிமின் அரசியல் பிரவேசம் எப்பொழுது.. எப்பொழுது என பலரின் கேள்விகளுக்கு இன்று விடை கொடுக்கப்பட்டது.. இன்று மதியம் நடத்தப்பட்ட நிருபர் சந்திப்பு ஒன்றில் அனுவார் இபுராகிம், பெர்மாத்தாங் பாவோ நாடாளுமன்றத் தொகுதியில் தாம் போட்டியிடவிருப்பதாகத் அறிவித்துள்ளார்.பெர்மாத்தாங் பாவோ தொகுதியானது அனுவார் போட்டியிட்டு வெற்றி பெற்றப் பழைய தொகுதியாகும்.அத்தொகுதியில் கடந்த மார்ச் 8 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற அனுவாரின் மனைவி வான் அசிசா இசுமாயில், அவரின் தொகுதியைத் தன் கணவருக்கு விட்டுக் கொடுப்பதாக அறிவித்தார். இன்று காலையில் தாம் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மக்களவைத் தலைவரிடம் ஒப்படைத்துவிட்டதாகவும், இருப்பினும் தாம் மக்கள் நீதிக் கட்சியின் தலைவராக தொடர்ந்து நீடிப்பார் எனவும் அவர் கூறினார்.


ஏற்கனவே சிலாங்கூர் மந்திரி புசார் டான் சிறீ காலிட் (பண்டார் துன் ரசாக்), மக்கள் நீதிக் கட்சியின் உதவித் தலைவர் அஸ்மின் அலி (கோம்பாக்) போன்றோர் தங்களது தொகுதிகளை அனுவாருக்கு விட்டுக் கொடுப்பதற்குத் தயாராக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 60 நாட்களுக்குள் மலேசிய தேர்தல் ஆணையம் பெர்மாத்தாங் பாவோவின் தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனுவார் இபுராகிமின் அரசியல் பிரவேசம் குறித்து முன்னால் பிரதமர் துன் மகாதீர் கருத்துரைக்கையில், "என் மனைவியாக இருந்திருந்தால், இதே முடிவைத்தான் எடுத்திருப்பாள்" என்று அவர் கூறினார்.

இதற்கிடையில் ஓரிணப்புணர்ச்சி வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்ட அனுவார் இபுராகிம் 48 மணி நேரத்தில் கைது செய்யப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் ஆருடம் கூறுகின்றன.

அனுவாரின் அரசியல் பிரவேசத்தைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையாக, மீண்டும் அவர் கைதாவாரா....?

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP