பாலாவின் புதிய சத்திய பிரமாணத்தில் நஜீப் பெயர் நீக்கப்பட்டுள்ளது..!

>> Friday, July 4, 2008


பாலாவின் புதிய சத்திய பிரமாணம் பின்வருமாறு :

நான் பாலசுப்பிரமணியம் த/பெ பெருமாள் கீழ்காணும் சத்தியப் பிரமாணத்தில் தகவல்களை நேர்மைக்குப் புறம்பின்றி அறிவிக்கிறேன்.

1. நான் இதற்கு முன்பு அரச மலேசிய போலீஸ் படையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. போலீஸ் படையில் 'கான்ஸ்டெபலாக' 1981ஆம் ஆண்டு இணைந்து பின் 'லேன்ஸ் காப்பரலாக' பதவி உயர்வு பெற்று இறுதியாக 1998-ஆம் ஆண்டில் சிறப்புக் காவல்த்துறைப்படையில் பணியாற்றி வேலையை இராஜினாமா செய்தேன்.

2.போலீஸ் வேலையை துறந்தவுடன் தனிப்பட்ட துப்பறிவாளராக இன்று வரை வேலை செய்து வருகிறேன்.

3. சூலை மாதம் 1-ஆம் திகதியன்று நான் வெளியிட்ட சத்திய பிரமாணத்தில், பத்தி 8, 25, 28, 49 மற்றும் 50லிருந்து 52 வரை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

அ. 8. அல்தான்துயாவைப் பற்றி நான் அப்துல் ரசாக்கிடம் விசாரித்த பொழுது, அல்தான்துயா தமது தோழி எனவும், அவளை ஒரு முக்கியப் புள்ளி ஒருவர் தமக்கு அறிமுகப்படுத்தி வைத்து, பொருளாதார ரீதியில் அவளை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆ. 25. இக்கலந்துரையாடல் நடைப்பெற்றச் சமயம், நான் தொடர்ந்து அப்துல் ரசாக்கிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக, அப்துல் ரசாக் என்னிடம் கூறியதாவது :

1) சிங்கப்பூரில் நடைப்பெற்ற வைர கண்காட்சி நிகழ்வு ஒன்றில், அல்தான்துயாவை தம்மிடம் அறிமுகப்படுத்தி வைத்தவர் நஜீப் துன் ரசாக்.

2) அல்தான்துயாவோடு தமக்கு உடலுறவு அனுபவங்கள் உள்ளதாக நஜீப் துன் ரசாக், அப்துல் ரசாக்கிடம் தெரிவித்தார்.

3) தற்போது தாம் வகிக்கும் துணைப் பிரதமர் பதவிக்கு பங்கம் ஏற்படும் என்ற அச்சத்தினாலும், அல்தான்துயாவிடமிருந்து தமக்கு ஏதும் மிரட்டல்கள் வந்துவிடக்கூடாது என்பதாலும், அவளை கவனிக்கும் பொறுப்பை அப்துல் ரசாக்கிடம், நஜீப் துன் ரசாக் ஒப்படைத்தார்.

4) நஜிப் துன் ரசாக்கும், அப்துல் ரசாக் பகிண்டாவும், அமீனாவும் பாரிஸ் நகரில் நடைப்பெற்ற விருந்து நிகழ்வில் ஒன்றாகவே இருந்துள்ளனர்.

5) நீர்மூழ்கிக் கப்பல் வாங்கும் குத்தகை கிடைத்திட அல்தான்துயா பேருதவி புரிந்துள்ளதால், அமெரிக்க டாலர் 500,000ஐ தமக்குரிய பங்காகக் கொடுக்கும்படி அல்தான்துயா கேட்டுள்ளார்.

இ. 28. அமீனாவுடன் நான் பேசிக் கொண்டிருந்த பொழுது, அமீனா என்னிடம் கூறியதாவது :

1) அப்துல் ரசாக்கை தாம் நஜீப் துன் ராசாக்வுடன் சிங்கப்பூரில் சந்தித்ததாக கூறினார்.

2) அப்துல் ரசாக்கையும், நஜீப் துன் ரசாக்கையும் தாம் பாரிஸ் நகரில் விருந்து நிகழ்வு ஒன்றில் சந்தித்ததாகவும் தெரிவித்தார்.

3) பாரிஸ் நகரில் நீர்மூழ்கிக் கப்பல் வாங்கும் குத்தகையைப் பெற்றுத் தர உதவியதற்காக அல்தான்துயாவிற்கு அமெரிக்க டாலர் 500,000 பங்கு கொடுப்பதாக வாக்களிக்கப்பட்டது.

4) அப்துல் ரசாக் தமக்கு மொங்கோலியாவில் வீடு வாங்கிக் கொடுத்ததாகவும், அதனை தமது அண்ணன் வங்கியீல் அடகு வைத்து விட்டதால் அதனை திரும்பப் பெறுவதற்கு பணம் தேவைப்படுகிறது எனக் கூறினார்.

5) தனது தாயார் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவரது மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது என்று கூறினார்.

6) அப்துல் ரசாக் தம்மை கொரியாவில் திருமணம் புரிந்துக் கொண்டதாகவும், தனது தாயார் கொரியா நாட்டைச் சார்ந்தவர் என்றும், தனது தந்தை மொங்கோலிய சீன கலப்புடையவர் என்றும் அவர் கூறினார்.

7) நான் அவளை அப்துல் ரசாக்கை சந்திக்க விடாமல் தடுத்தால், நஜீப் துன் ரசாக்கை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தர முடியுமா என என்னிடம் கேட்டாள்.

ஈ. 49. அதன் பின் என்னுடைய வாக்குமூலத்தை ஒவ்வொரு நாளும் காலை 8.30 மணியிலிருந்து மாலை 6 மணிவரை தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு வாங்கிக் கொண்டனர். எனக்குத் தெரிந்த அனைத்தையும், குறிப்பாக நஜீப் துன் ரசாக்கிற்கும் அல்தான்துயாவிற்கும் உள்ளத் தொடர்பு உட்பட எல்லாவற்றையும் கூறினேன். ஆனால் இறுதியாக அறிக்கையில் கையொப்பமிடும் போது நான் நஜீப்பைப் பற்றிக் கூறிய விஷயங்கள் அங்கு இடம் பெற வில்லை. அவை நீக்கப்பட்டுவிட்டன.

50. ஷா ஆலாம் நீதிமன்றத்தில் அசீலா, சிருல், அப்துல் ரசாக் போன்றோரின் வழக்கு நடைப்பெற்ற பொழுது எனக்கு கிடைத்த ஆதாரங்களைச் சமர்ப்பித்தேன். ஆனால், நீதிமன்றத்தில் யாரும் நஜீப் துன் ரசாக்கிற்கும் அல்தான்துயாவிற்கும் உள்ளத் தொடர்பைப் பற்றி என்னிடம் கேள்வி எழுப்பவில்லை.

51. அப்துல் ரசாக் கைதாகும் சமயம் நான் அவருடன் காலை 6.30 மணியளவில் அவரின் வழக்கறிஞரின் அலுவலகத்தில் இருந்தேன். அப்பொழுது அப்துல் ரசாக் முந்தையா நாள் நஜீப்பிற்கு குறுந்தகவல் அனுப்பி தாம் கைதாகும் சூழ்நிலையில் இருப்பதை நம்பமுடியவில்லை என தெரிவித்ததாகவும், அதற்கு மறுபதில் ஏதும் வரவில்லை எனவும் அவர் கூறினார்.

52. காலை 7.30 மணியளவில் அப்துல் ரசாக்கிற்கு நஜீப்பிடமிருந்து குறுந்தகவல் ஒன்று வந்தது. அக்குறுந்தகவலை என்னிடமும், அப்துல் ரசாக்கின் வழக்கறிஞரிடமும் அப்துல் ரசாக் காட்டினார். அக்குறுந்தகவலில் "நான் போலீஸ் படைத் தலைவரை இன்று காலை 11 மணிக்கு சந்திக்கிறேன். பிரச்சனை சுமூகமாக முடிந்துவிடும். சமாதானமாக இரு" என்று இருந்தது.



சூலை 1-ஆம் திகதியில் வெளியிடப்பட்ட சத்திய பிரமாணத்தில், 8, 25, 28, 49 மற்றும் 50லிருந்து 52 வரையிலான பத்திகளில் அடங்கிய தகவல்களை நான் மீட்டுக் கொள்கிறேன். அத்தகவல்கள் அனைத்தும் உண்மையல்ல எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அ. அப்துல் ரசாக் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் என்னைச் சந்தித்து, அல்தான்துயாவை தமக்கு முக்கியப்புள்ளி ஒருவர் அறிமுகப்படுத்தியதாக கூறவில்லை.

ஆ. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அப்துல் ரசாக், நஜீப் துன் ரசாக் அல்தான்துயாவோடு உடலுறவு வைத்துக் கொண்டதாக அவரிடம் கூறியதாக என்னிடம் கூறவில்லை.

இ. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், நஜீப் துன் ரசாக் அல்தான்துயாவை பொருளாதார ரீதியில் கவனித்துக் கொள்ளுமாறு அப்துல் ரசாக்கிடம் கூறியதாக, அப்துல் ரசாக் என்னிடம் கூறவில்லை.

ஈ. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அப்துல் ரசாக்கும், அல்தான்துயாவும் நஜீப்போடு பாரிஸ் நகரில் நடைப்பெற்ற விருந்து நிகழ்வில் ஒன்றாக இருந்ததாக என்னிடம் கூறவில்லை.

உ. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அல்தான்துயா நீர்மூழ்கிக் குத்தகைக் கிடைத்திட உதவி புரிந்தமைக்காக அமெரிக்க டாலர் 500,000 கேட்பதாக என்னிடம் கூறவில்லை.

ஊ. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அப்துல் ரசாக்கும்/ அல்தான்துயாவும் நஜீப்பை சிங்கப்பூரில் சந்தித்ததாக என்னிடம் கூறவில்லை.

எ. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், நஜீப்பை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு அல்தான்துயா என்னிடம் கேட்கவில்லை.

ஏ. போலீஸ் விசாரணையின் போது நான் ஒருபோது நஜீப் துன் ரசாக் பெயரை பயன்படுத்தவில்லை. விசாரணை அறிக்கையில் கையொப்பமிடும்வேளையில் நான் கூறிய அனைத்து தகவல்களும் அதில் இடம்பெற்றிருந்தன.

ஐ. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், அப்துல் ரசாக் கைதாவதற்கு முதல் நாள் நஜீப்பிற்கு குறுந்தகவல் அனுப்பியதாக என்னிடம் கூறவில்லை.

ஒ. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அப்துல் ரசாக் நஜீப்பிற்கு குறுந்தகவல் அனுப்பியதாகவும், நஜீப் போலீஸ் படைத் தலைவரைச் சந்திக்கப்போவதாகவும், அதுவரையில் சமாதானமாக இருக்கக் கோரியதாக நஜீப் தன்னிடம் தெரிவித்ததாக அப்துல் ரசாக் என்னிடம் கூறவில்லை.

5. இதுபோக, நான் சூலை மாதம் 1-ஆம் திகதி வெளியிட்ட சத்திய பிராமாணம் முழுவதையும் மீட்டுக் கொள்கிறேன். காரணம், சூலை 1-ஆம் திகதியிடப்பட்ட சத்திய பிரமாணத்தை வெளியிட வற்புறுத்தப்பட்டேன்.

55) Statutory Declaration Act 1960. எனும் சட்டத்தின் கீழ் நான் சத்தியப் பிரமாணத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து தகவல்களும் உண்மை என அறிவிக்கிறேன்.

பாலசுப்பிரமணியம் த/பெ பெருமாள்
சூலை 1,2008

பாலா முதலாவது சத்திய பிரமாணம் செய்வதற்கு வற்புறுத்தப்பட்டாரா, அல்லது புதிய சத்திய பிரமாணம் செய்வதற்கு மிரட்டப்பட்டாரா என்பது அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம்..!!!

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

Anonymous July 5, 2008 at 1:08 PM  

Hmmm...

என்னத்தான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி அழியட்டுமே..
தன்னாலே வெளிவரும் தயங்காதே, இறைவன் இருக்கிறான் கலங்காதே!

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP