கவிஞர் ஏ.எஸ் பிரான்சிஸ் இன்று சுவீடன் பயணம்..

>> Wednesday, July 16, 2008




கவிஞர் ஏ.எஸ் பிரான்சிஸை வாசகர்களனைவரும் மறந்திருக்க மாட்டீர்கள், அண்மையில் அவருடைய "சாசனம்" கவிதை நூல் தொடர்பாக ஓலைச்சுவடியில் பதிவிட்டிருந்தேன். "சாசனம்" பதிவைக் காண, கீழ்கண்ட சுட்டியைச் சொடுக்குங்கள்.

http://olaichuvadi.blogspot.com/2008/04/blog-post_1251.html

கவிஞர் பிரான்சிஸ், இண்ட்ராஃப் போராட்டங்கள் குறித்து எழுதிய கவிதைகள் அனைத்துமே ஆழ்கடல் பெற்றெடுத்த முத்துக்களைப் போன்றவை. "சாசனம்", "மக்கள் சக்தி" ஆகிய தலைப்புகளில் வெளிவந்த அவரின் கவிதை நூல்கள் ஒவ்வொரு இண்ராஃப் உறுப்பினர் கையிலும் தவழ வேண்டிய ஒன்று. கவிதைகளின் ஒவ்வொரு வரிகளும் காயடிக்கப்பட்ட சமுதாயத்தின் எதிரிகளை சம்மட்டி கொண்டு அடிப்பதுபோல் அமைந்திருப்பது நூலின் சிறப்பு எனலாம். இவருடைய படைப்புகள் வாசகனை வீறுகொண்டு எழச் செய்யும் என்பது திண்ணம்.

இன்று புதன்கிழமை கவிஞர் ஏ.எஸ் பிரான்சிஸ் சுவீடன் நாட்டிற்கு பயணமாகவுள்ளார். கவிஞர் அவர்கள் மூன்று மாத காலங்கள் ஸ்காண்டிநேவியா நாடுகளுக்குச் சென்று ஆங்கு வசிக்கும் தமிழ் இலக்கிய ஆர்வளர்களைச் சந்தித்து இலக்கிய விருந்தைப் பரிமாறிக் கொள்ள திட்டமிட்டுள்ளார்.

வெளிநாட்டு தமிழ் இலக்கிய பேரறிஞர் பெருமக்கள், இலக்கிய ஆர்வளர்கள் கவிஞரைச் சந்திக்க எண்ணம் கொண்டால், அவரைப் பின்வரும் முகவரியோடு அல்லது தொலைப்பேசி எண்களோடுத் தொடர்புக் கொள்ளலாம்.

கவிஞர் ஏ.எஸ் பிரான்சிஸ்
சுவீடன் முகவரி :

Serenadgatan 50.
21572 Malmo, Sweden.

தொலைப்பேசி எண்கள் : 8011182170


கவிஞர் ஏ.எஸ் பிரான்சிஸ் தமது இலக்கியச் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிவர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP